Friday, August 23, 2013

திருக்குறள்



 திருக்குறள்

வான்புகழ் வள்ளுவனை உலகினுக்கே தந்து பெருமைஉற்றது   தமிழ்நாடு



தினைத் துணை நன்றி செயினும்  பனைத்துணையாக்
கொள்வோர் பயன் தெரிவர்

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்  தக

நகையீகை இன்சொல் இகழாமை நான்கும் 
வகை யென்ப வாய்மைக் குடிக்கு

நன்றறி வாரிர் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியோடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து



பிறர் பழியும் தம்பழியும் நாணுவர் நாணுக்
குறை பதி யென்னும் உலகு



---திரு வள்ளுவ மாலை---------



வான்புகழ்வான்புகழ் வள்ளுவனை உலகினுக்கே தந்து பெருமைஉற்றது   தமிழ்நாடு றள் பற்றிய  பிற  இலக்கியவாதிகளின்   கணிப்பு




அணுவைத் துளைத்து  ஏழ் கடல்   புகட்டி 
குறுகத் தறித்த குறள்    ஔவையார்


கடுகைத் துளைத்து  ஏழ்  கடலைப் புகட்டிக்
குறுகத்  தறித்த குறள்



எல்லாப்பொருளும் இதன்பால் உளதென்பால்
இல்லாத எப்பொருளும்  இல்லையால்--ஸொல்லால்
பரந்த பாவால் என்ன பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத்துணை


ஆயிரத்து முன்னூற்று முப்பத்தருண்கு றளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின்போய் ஒருத்தர்
வாய் கேட்க நூல் உளவோ மன்னு தமிழ்ப்புலவராய்
ராய்க்கேட்க வீற் றிருக்கலாம்



திருக்குறள்  வள்ளுவ பெருந்தகையினால்   உலகுக்கு அளிக்கப்பட்ட   புதையல்
பல்வேறு  புலவர்கள்  அறிஞர்கள்  திருக்குறளுக்கு உரை விளக்கம்  எழுதினார்கள்   காலம் கடந்தும் இன்று 21 ஆம் நூற்றாண்டிலும்  அதன் பெருமை பேசப்படுகிறது .பரமேலழகர் பரிப்பெருமாள்  காளிங்கர் மணக்குடவர்   போன்றோர்  உரை எழுதி மக்களிடம்   திருக்குறளினை கொண்டு சேர்த்த பெருமை உடையவர்கள்
திருக்குறள்   1330  குறள்களைக்கொண்டது
அறத்துபால்    பாயிரம் ,   1-௪  அதிகாரம்  எனவும்
                   இல்லறவியல்    5---௨4  அதிகாரமும்
                  துறவறவியல் 25---௩7  அதிகாரமும்
                    ஊழியல்            38      என  ஒரு  அதிகாரமும்     கொண்டது

பொருட்பால்         அரசியல்    39-------௬3   அதிகாரமும்
                    அமைச்சியல்  64--------௭3   அதிகாரமும்
                    அரணியல்   74---------௮1  அதிகாரமும்
                    நட்பியல்   82------௯5    அதிகாரமும்
                    குடியியல்  96-------௰8   அதிகாரமும்
                   கொண்டதாகவுள்ளது
காமத்துப்பால்     
                   களவியல்   109-------- 115  அதிகாரமும்
                  கற்பியல்    116------- 133   அதிகாரமும் கொண்டதாக   
திருக்குறள்  133   அதிகாரமாகவும்    ஒரு அதிகாரம் பத்து குறளாக     133 அதிகாரமும்   1330  குறள் களையும்
கொணடு  கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு மேலாக   மக்களிடையே   வழிகாட்டியாக      மக்கள் சமுதாயத்தை  சமுதாய அமைப்பினையும்    வாழ்வுமுறையையும்   எழுதாத சட்டங்களாக   
மக்கள் சமுதாயம்  பின்பற்றுகின்றது



திருவள்ளுவர்
___________________

தமிழ்மறை எனும்  தமிழனின்   வாழ்வு முறையினை   வழிப்படுத்த    திருக்குறளை தந்த தெய்வப்புலவர்

மைலாப்பூரில் பிறந்து  மதுரை தமிழ் சங்கத்தில்  பங்கு கொண்டு  தமது நூலால்    பலருடைய பாராட்டைப் பெற்றவர்

கடவுள் நம்பிக்கையுடையவர்  என்பதை காட்ட  கடவுள் வாழ்த்தினை பத்து குறளால்  திருக்குறளை   ஆரம்பிக்கிறார்

ஊழ்வினை   பழவினை முன்யென்ம வினை என நம்பிக்கை கொண்டு   ஊழியல் எனும் அதிகாரத்தினையும்   திருக்குறளில் பாடிஉள்ளார்

இல்லறம்  அதன் பின்னர்  துறவறம் எனெ வாழும் முறைகளையும்  திருக்குறளில்  பாடிஉள்ளார்

அறம்  வலியது  அறம்  இல்லாவிடில் அறம் கூற்றுவன் ஆகும் எனும் பொருள்பட   அறத்தினை நன்கு  விளக்கி கூறிஉள்ளார்

அரசன் அமைச்சன் அரசாங்கம்   எப்படி அமைய வேண்டுமென   குடி மக்கள் எப்படி  வாழ்வேண்டுமென   பொருட்பாலில் 
39-௰8  வரை  உள்ள அதிகாரங்களில் நன்கு  காட்டிஉள்ளார்
அவர்க்குரிய அரசியல் பொருளியல் உளவியல் சமூகவியல்  கருத்துக்கள் இன்றும்  பின்பற்றக்கூடியனவாகவும்  உண்மைகளையும் கொண்டுள்ளன

அன்பு என்பது   ஒரு பெரிய   தமிழ் மறை .அந்த தூய அன்பு மட்டும்  மக்களிடையே  தொற்றுக்கிருமி போல் பரவிவிட்டால்   பூவுலமே சொர்க்கம் ஆகிவிம் என்பதுபோல்  அன்புடைமையை விளக்கியுள்ளார்

அன்பு என்பது போல் கற்பும்  மக்களிடையே  உண்மையாய் இருக்கவேண்டும்   கற்பு என்பது ஒழுக்கம் மட்டுமல்ல  சொன்னபடி செய்தல்  விதிக்கப்பட்ட  ஓழுக்கங்களை  பின்பற்றுதல்    என திருவள்ளுவர்   தமது    நூலில் நன்கு 
உறுதிபடக் கூறிஉள்ளார்

ஏழை யின் மீது கொண்ட  இரக்கம்  இரப்பவர் இரத்தல்  என்பது மிக துன்பமானது  என்பதால்  மக்கள் ஏழை மீது  இரக்கங் காட்ட வேண்டு மெனெ தெளிவாய் கூறிஉள்ளார்

மக்கள்  இல்லறம் துறவறம் பின்பு வானுலக வாழ்வுக்கும் பூவுலுகிலேயே   மண்னுலகில் நல்லபடி வாழ்ந்து பின்னர் வின்ணுலகம்  செல்ல கடவுள்   நம்பிக்கை மிக  முக்கியம் என்பதனையும்   மிக நயம் பட திறமையாக திருக்குறளில்   வெளிப்படுத்திய   தீர்க்கதரிசி திருவள்ளுவர்.  இவர் தமிழ்  உலகத்து  தவப்புதல்வர் ஆவார்


**

*எப்பொருள்  யார் யார்  வாய்க் கேட்பினும்  அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு(423  அறிவுடமை )

எப்பொருளை  யார் யாரிடம் கேட்டாலும்   கேட்டவாறு  கொள்ளாமல்  அப்பொருளின்  மெய்ப்பொருள்  காண்பதே  அறிவாகும்

*வருமுன்னர்க் காவாதான்  வாழ்க்கை  எரிமுன்னர்
வைத்தூறுபோல்  கெடும்

குற்றம் நேர்வதற்கு  முன்னமே  வராமல்  காத்துக் கொள்ளாதவனுடைய  வாழ்க்கை   நெருப்பின்  முன் நின்ற  வைக்கோல் போர்  போல் அழிந்துவிடும்  (  435  குற்றம் கடிதல்)


*செய்தக்க  அல்ல  செயக்கெடும்  ,செய்தக்க
  செய்யாமை  யானும்  கெடும்
 
ஒருவன்  செய்யத்  தகாத  செயல்களை  செய்வதனால்  கெடுவான்
  செய்யத்தக்க செயல்களை  செய்யாது  விடுவதனாலும்   கெடுவான்(  466  தெரிந்து செயல் வகை)



செவி கைப்பச் சொற்பொறுக்கும்  பண்புடை வேந்தன்
கவிகைக் கீழ்  தங்கும் உலகு            -------௩89   - -இறை மாட்சி

குறை  கூறுவோரின்  சொற்களை  செவிகைக்கும் நிலையிலும் 
பொறுக்கின்ற பண்பு  உடைய அரசனது  குடை நிழலில்  உலகம்  தங்கும்


கொல்லான்   புலாலை  மறுத்தானை  கைகூப்பி
எல்லா  உயிரும்  தொழும்   -------௨60   புலால் மறுத்தல்

ஓர்  உயிரினையும்   கொல்லாமல்  புலால் உண்ணாமல்   வாழும்  நெறியினை உடையவனை   உலகில் உள்ள    அனைத்து உயிரினங்களும்  கை கூப்பி வணங்கும்



குனம் நாடி  குற்றமும் நாடி  அவற்றுல்
மிகை நாடி  மிக்க கொளல்

ஒருவனுடைய  குணங்களை  ஆராய்ந்து  பின்னர் குற்
றங்களையும் ஆராய்ந்து  ,மிகுதியானவை எவையென  ஆராய்ந்து 
மிகுந்திருப்பது எதுவென  தெளிந்து கொள்ளல் வேண்டும்

கடிந்த  கடிந்து ஓரர்  செய்தாற்கு  அவைதாம் 
முடிந்தாலும்  பிழை தரும்             ---------௬58   ---வினத்தூய்மை

ஆகாதவை  என விலக்கப்பட்ட  செயல்களை   செய்யாது விடாமல்   தொடர்ந்து  செய்து  முடித்தாலும்  அச் செயலால்   துன்பமே விழையும்




செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்          ---------௬37   - -----அமைச்சு

நாம் கற்ற நூலறிவால்  செய்யும்  வகைகளை அறிந்தும்  ,எனினும்  உலக இயல்போடு   சேர்ந்து  அதற்கு பொருந்துமாறு   செயல்களை செய்ய வேண்டும்

எவ்வது உறைவது உலகம்  உலகத்தோடு
அவ்வது உறைவது  அறிவு     -------௪26     ---அறிவுடைமை

உலகம் எப்படி   செயல் படுகிறதோ  அவ்வகையில்  உலகத்தோடு  பொருந்திய வகையில்  செயல் படுவதுதான்    புத்திசாலித்தனமாகும்



மறந்தும் பிறன்கேடு  சூழற்க சூழின்
அறம் சூழும்  சூழ்ந்தவன் கேடு


பிறருக்கு  கேட்டைத் தரும் செயல்களை  மறந்தும் ஒருவன்  செய்யக்கூடாது.   எண்ணவும் கூடாது.  எண்ணினால்   எண்ணியவனுக்கே கேடு விழையும்  (  204  தீவினை  அச்சம்)




உறுப்பு அமைந்து ஊறு  அஞ்சாமை  வெல்படை வேந்தன் 
வெருக்கையுள்   எல்லாம்  தலை  ( 761  படை மாட்சி)



எல்லா வசதி  கட்டமைப்பு  நிறைந்ததாய்  தடைகள்  இடையூறு   எதிர்ப்புகளுக்கு அஞ்சாத   வெற்றி கொடுக்கக்கூடிய  படைகளை கொண்டவனுடைய  அரசனுக்கு  இதனைவிட  வேறு செல்வம்  பெருமையில்லை. ஒரு அரசன் புகழடையக்கூடிய எல்லாச்செல்வங்களிலும்  பெரும் செல்வம்   வெற்றி தரும்   இப்படை ஆகும்

Thursday, August 22, 2013

பொன் மொழிகள்



                                    
உளி விழுவது வலியென அழும் கற்கள் சிற்பம் ஆகா

உண்மையான அன்புக்கு ஏமாற்றத் தெரியாது ஏமாறத் தான் தெரியும்

புத்தகங்கள் கண்களைத் திறக்கும் திறவு கோல்

உன்னை செதுக்கும் உளி உன்னிடம் உளது


பிரார்த்தனை கடவுளிடம் சேர்க்கும் சேவை செய்ய கடவுள் அருகே வருவார்

ஆயுதத்தால் அல்ல வெற்றி ஆன்மாவின் உத்வெகத்தால் வெற்றி கிட்டும்

உள்ளத்தின் அச்சத்தை வெல்பவனால் எதிரியை வெல்ல இயலும்

கருணை உள்ள உள்ளம் வெற்றியை பெற முடியாது

வீரனால் மட்டும் தான் பிறர்க்கு உதவ முடியும். வெற்றி பெற முடியும்   

விதியைப்  படைபபவன்  இறைவன் எனினும் துணிவு  உன்னுள்ளே தானே   இருக்கிறது.

ஒருவனுக்கு பொருள் பணம் புகழ் அல்ல பெரிது அவனைப்  புரிந்துகொண்ட அதற்க்கு தீனி போடும்  திருப்தி அடையச்    செய்யும் மனநிலை உடையவர்களது அன்பும்  ஆதரவும் நட்பும் வாழ்த்துக்களுமே பெரியதாகும்.
             
வசந்தகாலத்தின்    மரத்தின்  இலைகளின் பொய்வேசம்  இலை உதிர்   காலத்தின் அடிச் சுவடு அதுபோல் இளமை என்பதும்   முதுமையின்     அடிசுவடு

பிறர் நலம் காண வாழத்தொடங்கும் போதுதான் மனிதர்கள் வாழத்தொடங்குகிறார்கள்

அலை  ஒய்ந்த  கடல்  எங்கும் இல்லை அதுபோல் நோக்கமின்றி ஏற்பட்ட உலக சிருஷ்டி எதுவும் இல்லை. எல்லா சிருஷ்டி வாழ்வின் இறைவனால் இயற்கையில்  எற்படுத்தப்பட்டது

கற்றவரின் முன் தாம் கற்றவற்றை மனதில் பதியுமாறு சொல்லவல்லவர் கற்றவர் எல்லாரிலும் மேலானவரென மதிக்கப்படுவர்
              
அறிஞர்கள் அவையில் நாம் கற்றவற்றை எடுத்துக்கூறி நம்மைவிட அதிகம் கற்றவரிடம் இருந்து மேலும் கற்றவெண்டும்

பகைவற்கு அஞ்சாத வீரம் பெறும் ஆண்மை அந்த பகைவற்கு ஒரு துன்பம் வரும் போது உதவுவது ஆண்மையின் உச்சம் என   புகழ்ப்ப ம்

ஆராய்ந்து பார்க்காமல் கொண்ட நட்பு அந்த ந்ட்பிலிருந்து விடுபட முடியாட அளவுக்கு கேடுகளை தரும்

பழிவந்து சேரக்கூடாது என்ற பண்புடைய குடியில் பிறந்தவர்களுடைய நட்பை பெற்றிருப்பது பெரும் சிறப்புடையதாகும்

அறிவில்லாத ஒருவருடைய நட்பை துற்த்தல் ஒருவரின் நற்பயனாகும்

சிரித்துப்பேசி நடிப்பவர்களின் நட்பைக்காட்டிலும் பகைவர்களால்    எற்படும் துன்பம்மிக்க நன்மை தரும்
 
மனித வாழ்வின் உயர்வு  அவர் மனதில் கொண்டுள்ள்ள  ஊக்கத்தின் அளவே இருக்கும்

வெள்ளத்தனய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய  உயர்வு

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாக  முடிக்கவேண்ட     இல்லையெல் அது அரைக்  கிணறு தோண்டிய  கதையாக  இருக்கும்

தன்னலம் விரும்பாமல் தான் மேற்கொண்ட செயலை   நிறைவேற்ற        விரும்புகிறவன்  தன்னைச் சுற்றியுள்ளோர்  நண்பர்கள் நாட்டுமக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து
அவர்களை தாங்கும் தூண் ஆவார்

முடியும் என்பது முன்னேறத் துடிப்பவர்களின் முதல் எழுத்து
முடியாது என்பது சோம்பேறிகளின் தலை எழுத்து

பாறங்கல்லின் தேவையற்ற்பகுதிகளை நீக்க அழ்கிய சிலை உருவாகும்
மனிதமனங்களின் தேவையற்ற சிந்தனைகளை நீக்க நல்ல மனிதன் உருவாகுவான்

எல்லா இனத்துக்கும் அதற்குரிய முகத்தையும் முகவரியையும்  கொண்டது

கற்பூரம் எரிந்து பிறர்க்கு ஒளியைக் கொடுக்கும் மெழுகுவர்த்தி எரிந்து தன்னை அழித்தபின் பிறர்க்கு ஒளி கொடுக்கிறது அதுபோல் உயர்ந்த மனிதர்கலெல்லம் தம்மை இழந்து சமுதாயத்துக்கு ஒளியாகி  வாழ்ந்து கொண்டிருகிறார்கள்

மனிதனைவிட மரம் செடிகள் சிறந்தன  
செடிகள் தமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என எரியுமே த்விர  பிற்செடிகளுக்கு தண்ணீர் கிடைக்கிற்தென எரிந்துவிடுவது கிடையாது

வான் சுருங்கியதாக வரலாறு  கிடையாது  அதுபோல் மனித சிந்தனைகளும் மனிதனும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்

விசம்  கொண்ட    போத்தல்களில்  லேபல் இருக்கும் ஆனால் மனிதர்களில் விசம் எது அமுதம் எது என காணமுடியாது  மனிதவர்க்கங்கள் தடுமாறிக்கொண்டு இருக்கிறது
       

Saturday, August 17, 2013

அறிமுகம்

கருணாகரப் பிள்ளையார் கோயில்


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா


வளரும் இளம் சந்ததிகள் சமுதாயம் எனும் அழகுக் கோவிலின் ஒவ்வொரு செங்கற்கள். அவர்கள் மனங்கள் சிந்திக்க, சிந்தனை செய்ய, அவற்றை நல்வழிப்படுத்த சைவமும் தமிழும் தமிழ் சமுதாயத்தின் வழிகாட்டிகள். எனவே நமது சமுதாயத்தின் இளம் சிறார்களின் உற்ற துணையாகவும், உந்து சக்தியாகவும் தொழிற்பட இந்த நாவுக்கினியன் செயல்பட்டால் அது நம் முயற்சியின் வெற்றியாகும். நன்றி