Wednesday, September 4, 2013

பெரியோர் அனுபவம்



சிவன் கோயில்
 தன்னைத்தானே புரிந்துகொண்டவன் தரணியைப் புரிந்துகொள்வான்
இயற்கையே பாதி இரவு பாதி பகல் அதுபோல் உலகில் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும் வாழ்க்கையில் சோகம் துக்கம் துயரம் மகிழ்சி நன்மையெனெ வரும்.

ஒருவர் மீது பொறாமை கொள்வதெனில் அவர் மீது திறமை, பெருமை, உயர்வு, நிச்சயமாக இருக்கும்.

நமது திறமைக்குச் சவாலாக இருக்கும்போது எதிர்ப்புக்கள் வரும் .அதனைக்கண்டு மனம் தளரக்கூடாது நிமிர்ந்துநின்று சவாலைச் சமாளிக்கவேண்டும்.

மனிதநேயம் உள்ளவரை மதிக்கப்படும்வரை மனிதநேயமுள்ள மனிதன் பெருகும்வரை மனிதநேயம் மனித சமுதாயத்தை காக்கும்.


கலைஞன் வெளித்தோற்றம் வேறு. நிஜம் வேறு கலைஞன் நல்ல களம் இடம் சூழல் வரவேற்பு இருந்தால் நன்கு சாதிப்பான்.

சிரிப்பு ஒரு அழ்கான கவிதை பூக்கள் மலர்வது சிரிப்பது போன்றது எனவேதான் பூக்கள் அழகாக இருக்கின்றன.

மானுடவாழ்க்கை இன்னல் நிறைந்தது எனவேதான் மானுடன் பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்கிறான்.

சிற்பிக்குள் வாழவிரும்பாத நீர்த்துளி ஒருபோதும் முத்தாவதில்லை.
பறப்பவன் சுவடுகள் எற்படுத்துவதில்லை நிலத்தில் நடப்பவன் தான் சுவடுகள் எற்படுத்துகிறான்.

பிரஜாபதி சகல மக்களையும் காப்பவன் பிரஜாபதி அவர் அரசன் கடவுள் பிரஜாபதி என அழைக்கப்படுவார்.
.
தமிழ் கலைகள் தமிழனின் முகவரி கலைகள் அழகின் இன்பத்தின் உறைவிடம் சுற்றி வர முட்கள் இருந்தும் ரோஜா சிரிக்கின்றது துன்பம் நேருகையில் வீணை எடுத்து மீட்டுவாயாக.

சொர்க்கம் சேர்க்கும் வழி பிறர் சொத்துக்கு ஆசைப் படாமை, பொய் சொல்லாமை, உதவி செய்யும் நிலை வந்தும் செய்யாமல் விடல், தண்டனைக்கு ஆழாக்கும்.

மனித சமுதாயம் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்
சத்தியம், பணிவு, கேள்வி ஞானம், ஒழுக்கம், ஆசார சீலம், பலம், வீரம். மனோபலம், தனம், தைரியம், பேச்சு வன்மை.

பூமியில் அடிக்கடி புயல் வரும் அதேபோல் வாழ்க்கையிலும் புயல் வரும் யாரையும் கேட்டுப் புயல் வருவதில்லை எமது சுய கட்டுப்பாடு தன்னம்பிக்கை நம்மைக் காக்கும்

குரு  இலட்சணம்   பகவானை அடையத்துடிக்கும்  பக்தர்களுக்கு வழி காட்டுபவர்.

பகவான் பக்தர்களின்  பக்திக்கு  வசப்படுவார்  தன்னம்பிக்கை உடைய எவரும் பிறரிடம் மண்டியிடத் தேவையில்லை. 

வெயிலின் அளவு கூடக்கூட நிழலின் அளவு குறையும்.  வலைகளின் அளவு கூடுவதால் மீன்களின் அளவு குறைவதில்லை. 

ஆன்மா லயிக்கும் இடம்  ஆலயம் இறைவன் குடிகொண்ட இல்லம் கோவில் என்பர். கோ என்றல் கடவுள், அரசன்.  இல் என்றால் இல்லம் கோவில் இறைவன் குடி கொண்ட இடம்.

பக்தருக்கு  இதயம் கற்கண்டு மாதிரி இருக்கவேண்டும்.  பார்க்க இறுக்கமாக இருந்தாலும் இனிப்பாக பாகாய் கரைந்து இளகிய மனம் கொண்டவர்களாய் இருக்கவேண்டும்

.பாலைவனத்தில் ஒட்டகம் வாழும் மிருகம் . அங்கு நீர் பற்றக்குறையை தவிர்க்க  அது நீரை சேமிக்கும் இயல்புடையது. அதுபோல் மானுடர்களாகிய நாமும் அறிவுத்திறனை தேடித்தேடி வளர்த்து எமது மூளை எனும் கொம்பூயூட்டரில் சேகரிக்க வேண்டும்  
உலகவாழ்வு ஞானேந்திரிய்ம் கர்மெந்திரியம் என்பனவற்றின் பாதிப்புக்கு உள்ளாகின்றது ஐம்புலன்களாகிய கண் காது மூக்கு வாய்  மெய் எனும் ஐம்புலன்களாலும் , அழுக்கு அவா வெகுளி இன்னச் சொல் மனம் சிந்தனை கோபம் போன்றவைகளால்  வாழ்வு சிதறுகின்றது. உலகில் இவையெல்லாம் இருந்துகொண்டுதான் இருக்கும்                
 படகு கடலில் மிதக்கின்றது .உப்பு நீராகிய கடல்நீர் படகுள் போகாது இருக்கும் வரை படகு மிதக்கும். ஆனால் கடநீர் சிறிது உள்ளேபோகுமானல் அது சிறிதுசிறுதாக கூடி இறுதியில் படகு கடலினுள் முழ்கிவிடும். அதுபோல் எம்மனதினுள்ளும் தீய சக்தி சிந்தனைகளை   புகவிடக்கூடாது புகவிட்டால்  அது படகு முழ்கியதுபோல் எம்மையும் அழித்துவிடும்  எம்மை சூழ்ந்து  நல்லது தீயது இருப்பினும் நல்லவற்றை மட்டும் எடுக்கப் பழகவென்டும்


தமிழ் மொழி ஆளுமை  சொல்வளம்  ஆழம் நிறைந்தது  தமிழ்  இலக்கியம் என்பது வாழ்க்கையின் இயல்பு செயல்பாடு  பேச்சுஇயல்பு  ஆகியவற்றை ஒரு தலை முறையிலிருந்து அடுத்த வரும் தலை முறைக்கு எடுத்து செல்பவை. இவை சமுதாய வளர்ச்சியிலும் ஒழுக்கத்திலும் அக்கறை காட்ட வேண்டும். இலக்கியமானது மானுட சமுதாயத்தை சிரிக்கவும் சிந்திக்கவும்  உதவ வேண்டும் வாழ்க்கை ஆகிய விஷத்தை அமுதமாக்குவது  கலைகளாகும்  வர்ணக்கலவைகளால் செய்யும் காவியம் . ஒவியம்.  வார்த்தைகளால் செய்யும் காவியம் கவிதை .  அங்கங்களின் நளின அசைவுக்ளால் செய்யும் காவியம் நடனம்.  கலைகள் மானுட சமுதாயத்துக்காக ஏற்ப்பட்டது பூக்களின் வாசம் பூக்களின் இயல்பை வெளிப்படுத்தும்  அதுபோல் நல்ல   கலைகள்   மானுட சமுதாயத்தின் இயல்பை     வெளிப்படுத்தவல்லன
பனித்துளியும் கடலை போய் சேருவதுதான் அதன் இலட்சியமாக கொண்டது  அதுபோல்  மனிதசமுதாயத்தை  இலக்கியங்க்ள்  வழிப்படுத்த வேண்டும்

தொழில் நுட்பம்  கண்டுபிடிப்பு என மக்கள் இன்று கூறுவது வள்ர்ச்சி என்பன  எம்  முன்னோர்கள் கூறியவை
இதயம் ஈர்ல் சிறுநீரகம்  நுரை ஈரல்  மாற்று சிகிச்சை   தொழில்னுட்பம் என்பர்  அன்றே சிவன்  விநாயகனின் உருவில் தலையையே யானை தலை ஆக்கினார்.  சூரன் வதை யில் தலைகளை மாற்றி  போரிட்டனர்
 இன்று செயற்கைமுறை  கருக்கட்டல்  சோதனைக்குழாய்  குழந்தை என்கிறார்கள் சாதனை  என்கிறார்கள்
அன்றே பாரதத்தில்  காந்தாரி  செயற்கை முறை 100  குழந்தைகளை  பெற்றெடுத்தனர
------------------------
1வைரமும்  கரியும் ஒரே  பூம்யில்தான் கிடைக்கின்றது  எனினும்  நீண்டனாள்  அமைதியாக  உறைந்து பொறுமை காத்த வைரம்  மானுடர் மகிழ்வுற  யொலிக்கின்றது
ஆனால்  கரியானது  அவதிப்பட்டு அமைதிஅற்று பொறுமையின்றி  அல்லல்பட்டமையால்   கரியாகி வெளிவந்து  நெருப்பினலும் விழுந்து எரிந்து தன் சுயரூபத்தை இழந்து அழிகின்றது
பொறுமைஉள்ள மனிதன் மின்னுகிறான்
பொறுமைஅற்ற் மனிதன்   அவலப்பட்டு அழிகின்றான்
2மரமானது  வெட்டுபவனை தாங்கி நீண்ட ஆணிவேரினால் நிலத்தில் நிலை கொள்கின்றது
அப்படியே நல்ல உயர் மனிதர்களும் பொறுமையாக இருந்து நிலையாக வாழ்கின்றனர்
3மரத்தின் கிளை வேர்களை பார்த்து நகைத்தது
நிலத்துள் மறைந்து
தண்ணீருக்கும் காற்றிற்கும் அவதிப்படுகிறாய் என்று
பூமியில் புயல் ஒன்று உருவாகியது
மரக்கிளைகள் ஆடியது ஆடியது
பின்னர் ஆடமுடியாது ஒடிந்து முறிந்தது
ஆந்த நேரத்தில் தென்றலையும் பெருமையையும்
 கூறிய மரக்கிளையின்  வாழ்க்கை முடிந்தது
அந்த நேரத்தில் வேரானது மரக்கிளையும் பார்த்து கூறியது  ஆணவம் செல்வச்செருக்கு கொண்ட பெருமை பேசும்
மக்களைப்போல உன் வாழ்க்கை முடிந்தது என்றது
என்னைப் பார் ஆடம்பரம் இல்லை எதோ கிடைக்கும் சிறிது உணவும் நீரும்  போதும் என்று பொறுமையுட்ன் மரத்தை தாங்கியவண்ணம் உடையாது முறியாது  மண்ணில்  நிலை கொள்ளச் செய்கின்றேன்
என்மரம் தொடர்ந்து வாழும்
இப்படியே பெரிய மனிதர்களின் தியாகம் சாதனை பொறுமை தன்சமுதாயத்தை தொடர்ந்து வாழ வைக்கிறது

--------------------------
எமது  பிள்ளைகளின் பிள்ளைப் பருவம்    முட்டைப் பருவம்
பிள்ளைகளின்  பள்ளிப்பருவம்  ம்யிர் கொட்டி
பிள்ளைகளின்   கல்லூரிப் பருவம்   கூட்டுப் புழு பருவம்
கல்லூரியினை விட்டு   வெளியேறும்போது  கூட்டுப் புழு சக்தி யெல்லாம் திரட்டி  உடைந்து வெளியேரும் பருவம் 
வண்ணத்துபூச்சியாக வெளியேறும்
வெளியேரும் வண்ணத்து பூச்சி பூங்காவினை அழகுபடித்துவதுபோல
மாணவர்கள் கல்லுரியினை விட்டு வெளியேறி உலகினை  அழகு படுத்த சமுதாயத்தை மாற்றி அமைக்க
உருவாகும்  மனிதசமுதயத்து  வண்ணத்துப்பூச்சிகள்
மென்மையாய் சுதந்திரமாய் பூவுக்கு பூ தாவி ஆடும் இளம் பட்டாம் பூச்சிகளே  எம்  குழந்தைகள்


துயரம்
-----------
துயரங்கள்  இயற்கை. சந்தோசம் மகிழ்ச்சி எப்ப்டி முக்கியமொ அதுபோல் துயரமும் நிலை யானது எல்லா இரவின் முடிவிலும் ஒரு   விடியல் வரும்..அதேபோல் விடியலும் அஷ்தமிக்கும் எனவே மனஙகளை மகிழ்ச்சி துயரம் கஷ்டம் இய்ற்கை நிஜதிகளென எல்லா நிகழ்விலும் இருபக்கங்கள் உண்டு  கடும் கும்மிருட்டு   கடந்து பின் கருக்கல்  கூடிய விடியல் வருவது போல விடியல் வரும் உச்சபோர் இறுதி கட்டப் போர் என்பன வந்தபின் கட்டாயம் அமைதி வரும் கோவில்களில்  சாமி வடக்கு வீதியில் வரும் போது திருவிழா நிறைவுறுவதுபோல  துயரங்கள் நிலையில்லாதது மனதை பிழிந்து வாட்டும் துயரங்கள் நிலைப்பதில்லை
எனவே மனித சமுதாயம்  துயரங்களில்  துவண்டுவிடாது   நிமிர்ந்து நிற்கும்   என துணிந்து கூறலாம்


நகை சுவை
---------------------
ஏளனம்  நகைப்பு  கவுரவகுறைவாக நடத்தல் நடப்பித்தல்   இவை தேவை இல்லாதது  ஆனால் நகைச்சுவையுணர்வுடன்  பேசும் நகைச்சுவை பிறரை சந்தொஷப்படுத்துமானால்  அந்த ந்கை ச்சுவை நன்மை உருவாக்கும்
 ஆனால் பிறரை புண்படுத்தும்  கஷ்டப்ப்டுத்தும் நகைச்சுவை  சமுதாயத்துக்கு  விஷ்மேயாகும்
முடிந்தவரை நன்மை பயக்கும் செயலை செய்ய வேண்டும்  நல்ல காரியங்கள் செய்யும் போது  பக்கவிளைவாக  தேவை இல்லாதது வரும்  சமையலின் போது புகை வரும் போது அதனை புகைகுழலால் வெளியெற்றவேன்டும் இல்லாவிடில்  புகை அறையினுள் பரவி கஷ்டப்படுத்தும்
அதுபோல்  நகைச்சுவை  மனித மனத்தை வேதனை ப்படுத்தக்கூடாது
 மனிதமனம்  ஒரு அனிச்ச மலர்   மனித இதயங்களை  அன்பு பண்பு அழகு மரியாதை பணிவு  போன்ற கவர்ச்சி நூலால் தைத்து  சமுதாயத்தின் உடலை மூடுங்கள்  அது  அணிபவர்க்கும்  பார்வையாளர்க்கும் சந்தோஷம் தரும்
மகிழ்ச்சி தரும்  மனிதமனங்களை  ஊசி கொண்ட குத்துவதாக  நகைச்சுவை  இருக்காது சமுதாயாதத்தை திருத்து  வழிகாட்டியாக இருக்கவேன்டும்

தலைமை
----------------
யுக புருசர்க்ள்  மத ரீதியான   தலைவர் களால்  உலகில்  மாற்றதை உருவாக்க முடியாது  பிறவிப்புத்திசாலிகளால்தான்  உருவாக்க முடியும். நேர்மையும்  அச்சமின்மையும்   எதிர்ப்பு குணங் லும்  ரத்தத்திலே  ஊறவேண்டும்  புத்திசாலிப் படைப்பாளிகளால்  தான் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கமுடியும்
சமுதாய மாற்றத்தை கொண்டு வரக்கூடியவர்கள்  அதி புத்தி சாலித்தனம்  நிறைந்த  தலைமைத்துவம்-

விதை
-----------
கட்டான் தரையில்  கல்   மண்  போன்ற நிலப்பரப்பில்   பயிர் செய்ய விதையை இட்டு  நேரத்தையும் விதையையும் வீனாக்குவது போல புரிந்துணர்வு அற்ற் மானிடனிடம்  உனது திறமை விதைகளை  போட்டு  மன வேதனை அடையாது 
பண்பட்ட போட்டதும் விளையக்கூடிய மண்ணை  ஒத்த  மானிடனிடம்  உனது திறமைகளைக்கூறி அவனை மேம்படுத்த உனது  அறிவை பயன் படுத்துவது  கேட்பவனுக்கும் ஆனந்தம்  அதைவிட  கூறுபவனுக்கு பேரானந்தம்
-----------------------------------------------------------------------------------------------

ரசிகன்
----------
இயற்கையின் ரசிகனும்  சிருஷ்டியின் சிருங்காரத்தின் ரசிகனும் தான் எழுத்தாளன்  கலைஞன் கவிஞன் .
இவர்கள் சாதாரண மனிதனிடம் இருந்து  ஒரு படி மேலே போனவர்கள்
உணர்வுகள்தான்    கற்பனையை உருவக்குகின்றது கற்ப்னை என்பது  மனஒட்டத்தின்  கனவு கற்பனைகதை களும்  பல உண்மைகளை அடக்கியது
ஆழ் கடலில்  அலைகள் எழுவதுபோல் மனம்  எனும்  ஆழ் கடலில் இருந்து  எண்ண அலைகள்  அலை அலையாக  பின்னிப் பிணைந்து திர்க்கமுடியாத சிக்கலாய்  உருவாகின்றது

      குளத்தில்  ஒரு கல்லை  போட்டதும்  எற்படும்  அலை பல அலைகளை  எழுப்பிவிடும்  அது போல் மக்கள் மனங்களில் விதைக்கும்  ஒரு சிந்தனை  பல எண்ணங்களை உருவாக்கும்  
யுகம் யுகமாய் மானிட வர்க்கத்தின் இயல்பை  மாற்றுவதி  செல்வத்திற்கு  பெரும் பங்குண்டு. செல்வம் பணம் பொருள்   மனித மனங்களை பெரிதளவு மாற்று கின்றது        

---------------------------------------------------------------------------------------
உலக நிதர்சனஙகள்

எந்த ஒரு துயரத்தையும்  குழப்பத்தையும்  துடைக்கும் சக்தி  இயற்கைக்கு உண்டு

உறக்கம் மனிதனுக்கு இன்பமும் சாந்தியும் அளிக்க வல்லது

கடல் அலை சர் சர் என கரையை நோக்கி அடிக்கும் லாவண்யம்  இயற்கை  எமக்கு அளிக்கும் இன்ப நிகழ்வு

இயற்கையும் ஒரு பொற்கொல்லன். மஞ்சள் நிற உடலில் தவளும் நீர் முத்துக்கள் தங்கத்தட்டில் வெண்முத்துக்களை பொருத்திய  அழகு அந்த உடல்  மின்னும் என்பது என்ன ஒரு கற்பனை

பெண்ணுக்கு சுதந்திரம்  அவள் அழகை  கெடுக்கிறது அடக்கம் அவள் அழகை கூட்டுகிறது அடக்கத்தில் சுதந்திரத்தை இழக்கும் பெண்களுக்கு மகத்தான  பெருமைஉறு சக்தி உருவாக்கின்றது


ஆட்களின் தொகையினால் மட்டும் ஒரு நகரம்  பாதுகாக்கப்படுவகில்லை அவர்களின் துணிவு  எச்சரிக்கை இவைகளால் காக்கப்ப்டுகிறது
வாழ்க்கையின் பெரும் பொறுப்புகளை எற்பவன்  தான் தலைவனாக முடியும்
பெரும் சாதனைகளின் அச்திவாரமே தியாகம் தான்
எந்த ஒரு கலைஞ்னுக்கும்  தொழிலாளிக்கும்  அவனது க்லைக்கும்  கடும் உழைப்புக்கும் வரவேற்பு கிடைக்கும் போது திருப்திஅடையும் போது அவனுக்கு அதை விட பெரிய ஊதியம் எதுவும் இல்லை
தீர்க்கதரிசிகளின் உத்தரவுகளும் சொல்லும் ஒரு வித இனம் புரியாத  சக்தியை அதாவது அபூர்வ சக்தியை கொண்டிருக்கும்

மனிதனை மனிதன் நம்ப வேண்டும்  நம்பாவிட்டால் வாழ்வது கச்டம் எனினும்  நம்பத்தகாத மனிதர்களும் உலகில் உண்டு

ஒருவருக்கு ஒருவர் சிந்தனைகள் வேறு அதை உணர்ந்து கொள்வதுதான் விவேகம்


அறிவு  விவெகத்தை  அளிப்பதில்லை தர்மத்துடன் கூடிய  அறிவுதான்  வளர்ச்சிஅடைகிறது

அறிவின் தெளிந்த ஒளிதான் விவேகம்
அதர்மம் அநீதி செயல்களை உடைய மனிதன்  ஒளி பெறுவதில்லை

வஞ்சகனாய் இருப்பவன் பெரு கோழையாக இருப்பான் அவன் பெரும் வஞ்சக செயல்களும் விவேகம் என நம்புகிறான்
அதர்மத்துக்கு  ஆரம்பம் வெற்றிதான் ஆனால் தர்மத்துக்கு வெற்றி மிக நிதானமாக வரும் அந்த நிதானம்  நிரந்தர சாதனைகளை தருகிறது
இதனை உலகம் புரிவதில்லை  புரிந்தால்  உலகம் மிக நன்றாக இருக்கும்


*மனிதன் அமைதிப்புறாவாக இருக்க வேண்டும்   வாழ்க்கை  தென்றலாகவும்  சுவையாகவும்  இனிமையாகவும் இருக்க வேண்டும்
*மனிதன் குழந்தை சிரிப்பும்  மென்மையான பேச்சும்  மிக நிதானமாகவும் இருக்க வேண்டும்
*மனதில்  எரிமலையும்  முகத்தில் குற்றால குளிர்ச்சியும்   ஆக இருப்பதற்கு  வாழ்க்கையின் சுமையும்  இடர்களும் தான்  காரணம்  வாழ்க்கை என்பது  ஒரு தெரியா புரியா  ரகசியம்
*வாழ்க்கை சில வேளைகலில்  கொடுமையாகவும்  சில வேளைகளில்  வியத்தகு  இன்பமாகவும் இருக்கிறது   இப்படி  புரிந்தும் புரியாமலும்   இருப்பதால்  இதுவே  பெரும்பாலான  திர்க்கதரிசிகளின் தேடலாய் இருக்கிறது

*இளம்  சிறாற்கள்  நாளைய சமுதாயத்தின்  முன்னோடிகள்
முதியோர்கள்   இளம் சிறார்களுக்கு  உரமாகவும்  வழிகாட்டியாகவும்  விளங்க வேண்டும்

*அறிவு இன்பம் இரண்டும் சேர்ந்தது வேதாந்தம். இன்பமற்ற  அறிவு கொண்ட வேதாந்தம் வறட்டு வேதாந்தம்

*ஆபத்து ஆள்பலத்தால்  மட்டும் சமாளிக்கப்படுவதில்லை  அறிவுப்பலத்தால் மட்டும் சமாளிக்கப்படுகிறது

*வாழ்க்கை  பரந்த கடலைப்போல  .சில வேளைகளில்  இன்பமாகவும்   பின்பு துன்பமாகவும்     அடிக்கடி மாறும்
கடலின் நிலைமையும்  சிலவேளை  கடல் சஞ்சாரத்துக்கு ஏற்றதாகவும்  சிலவேளை சொல்ல முடியாத கொந்தளிப்பையும்  தரும். கடல் அலை  
அடிக்கடி மாறும் தன்மை யானது  அதுபோல் வாழ்வும்  எப்படியும் மாறும்

*கவிஞன்    கவிதைக்கு இலக்கணம் வகுப்பவன்   உலகினை ரசிப்பவன் எவனும் கவிஞன் தான்  உணர்வுகள் கொந்தளிக்கும் மனப்பாங்கு  மனிதனை கவிஞாக்கிறது   அழகிகள் கவிகளின் இலக்கியம்  
பெண்ணின் அழகு   நதி அழகு  கடல் அழகு  மலர் அழகு  இயர்கையின் அழகு  கவிதை கூறத்தூண்டும் 

*வானமெனும் கூரையிலும் தரை எனும்  தரைக் கம்பளத்திலும்   இடையே  இயற்கையெனும்  எழில் கொண்ட  உலகம் உலவு கிறது  இந்த உலகில்தான்  என்னென்ன  காட்சிகள் கருமங்கள் கடமைகள்  செயல் வைபவங்கள்  மாறுபாடுகள்
இயற்கையின்  சிரிஷ்டி  மனித கற்பனை எண்ணங் களுக்கு அப்பாற்பட்ட  ஒரு அற்புதம்

*கனவு காண்பது  மனித இயற்கை அதனை உடைப்பது விதியின் இயற்கை இதுவே வாழ்வின் போக்கு

*மனிதசமுதாயத்துக்கு நம்பிக்கை வேண்டும்  நம்பிக்கை   அந்த பலம்  சித்ததுக்கும் சிந்தனைக்கும்  சக்தியை   கூட்டுகிறது
*மனித முயற்சிகள் பிரயத்தனங்கள்  பலவீனமானது இல்லை     ஆனால்  விதியின் வலிய கரத்துக்கு முன்னால்  அவை  அற்பமானது





*இசைக்கருவிகளும்   வாழ்வின் இயல்பை உணர்த்துவன  
நாதசவரம்  வாழ்க்கையில் ஓட்டை உள்ளவன் பிரகாசிக்கிறான்  நாதச்வரத்தின் ஓட்டைகளே காற்றின் துணைகொண்டு
னல்ல இசையை வழங்குகிறது
*தவில்  மேள வாத்தியம்  சம்பந்தமே இல்லாது சில மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்
அதுபோல் தவில்   .நிரபரதி  அடிபட்டுப்போகிறான்
ஒத்து வாத்தியம்  என்றுமே எல்லா இடமும்  ஒத்து போவது நல்லது  .அது தான்  சமுதாயத்தின் சமூக அமைப்பாகும்

*கனவுகள்
-------------
தூக்கத்தில் வருவது   துக்கத்தை கலைப்பது கனவல்ல
மனிதனை தூங்கவிடாது துரத்திக்க்கொன்டே இருப்பதுதான்  கனவு
மனித லட்சியத்தின்  விடியல்தான்  கனவு  .லட்சியமில்லா விடியல்கள்  வாழ்வின் தொலைந்த  பக்கங்கள்



மண்புழுவின்  இரத்தம்   வெள்ளை
பூச்சி இனங்களின்   இரத்தம்   கலர் இல்லை
ஆனால் மனித இரத்தம் கலர் சிவப்பு எல்லா மனித இரத்தில்  நிறம் சிவப்பாகையால் எல்லா மனிதனும்   அபத்தானவர்கள்  நாம் என்றும் எதிலும் எச்சரிகையுடன் இருக்கவேடும்







பூகம்பம்

  பூமியும்  பொறுமை இழக்கும்

  பூமியும் சில மனிதர்களை போல   வெளித்தோற்றம்  அமைதியாக இருக்கும் . சலனம், அற்று   கவிஞர்களின் பாடலில்  அகழ்வாரைத்தாங்கும் நிலம் போல எனெ பாடுவர் .ஆனால் பூமியின்  நிகழ்வுகளை பார்க்கும் போது  இதனை எற்றுகொள்ளமுடியாது .  பூமியும் உள்ளெ  குமுறிக்கொண்டும்  கொந்தளித்துக்கொண்டும் தான் இருக்கிறது .பொறுமை இழந்த நிலையில்  கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  பூகம்பமாக வெடித்து  தனது  கோபத்தை வெளிப்படுத்துகிறது. எரிமலையாக வெடித்து  அதிஉயர் வெப்பதுடன் கூடிய  எரிமலை ஆறாக ஓடுகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல   இயற்கையாகிய பஞ்ச  பூதங்களாகிய  பூமி காற்று  நீர்  தீ வானம் ஆகியவையும்  பொறுமை இழக்கும்


கடலின்  வேதனையை கடல்  சிறிய அளவில்     இடை இடையே     காட்டும்  .  பொறுமை இழக்கும் நிலையில்   சுனாமியாகி   தனது  கோரத்தண்டவத்தை காட்டிவிடும்  .மனிதர்களை  கடலுக்குள் இழுத்து  பின்னர் கரையில் தள்ளிவிடும்
சுனாமி எற்பட்டபோது  கடல் கரையில்  தான்  எவ்வளவு மனித குவியல் கள்  மீன்குவியல் போல


வானம்    பொறுமை இழந்தால் மழை  அளவு மீறி பொறுமை இழக்கும் போது  பெரு மழையாகா  பூமியை  பெரு வெள்ளமாக  புரட்டிப் போடுகிறது
காற்றும் இது போல  தென்றாலாகவும்  குளிர் காற்றகவும்  மனிதனுக்கு  இன்பம் கொடுத்த  காற்று  சூறாவளியாக   பூமியில் பெரும் அழிவுகளை  காடும்  . 


தீ  மனிதன் நல்ல காரியங்களுக்கு  பயன் படுத்தும் போது  மகிழ்சியடையும் மனிதன்  சிலவேளை  தீமைக்கும் பயன் படுத்துகிறான்.  பொறுமை இழக்கும் வரை  அமைதியாக இருக்கும்.  ஆனால் பொறுமை இழக்கும் போதுதான்  காட்டுத்தீயாக  பூமியை பதம் பார்க்கிறது


இயற்கையே பொறுமை இழக்கிறது எனில்  மனிதன்  எப்படி பொறுமை  காப்பான்.  நல்ல மனித மனங்களை  காயப்படுத்தீர்கள்.  தீமையும் நன்மையும்  சேர்ந்திருக்கும்.  ஆனாலும்  முடிந்தவரை  நல்ல மனித இதயத்தை   காயப்படுத்தாதீர்கள்  .  நல்ல  உள்ளங்களின்  பொறுமையும்  இழந்தால்  பேரழிவுதான் .

 நல்ல மனிதர்   ஒருவர்  போதும்  மானுட  சமுதாயம்  வளர்ச்சிஅடையும்  . 




தீண்டாதே தீண்டாதே  நல்ல மனதை  தீண்டாதே
வாழ்த்துங்கள்  வாழ்த்துங்கள்  நல்ல  செயலை வாழ்த்துங்கள்



நன்மைகள்  கூடவும்  தீமைகள்  குறையவும்   பாடுபடுவோம்
எந்த ஒரு  தப்பான செயலுக்கும்  மனிதன்  இறப்புக்குள்  தண்டனை  அடைவான். சிலப்பதிகாரம்  கூறும்  உண்மையும் அதுவே . .அறம்  ,தர்மம் , அன்பு  நிலையானது.  பூமியைவிடவும்  நிலையானது  ,உறுதியானது.




மனிதன் திருப்தியின்மையுடன் இருக்க  வடிவவமைக்கப் பட்டிருக்கிறான் 

எத்தனை சாதனைகள் வெற்றிகள்  மகிழ்ச்சி  உடையவனாக  இருந்தாலும்   மனிதன் திருப்தி அடைவதில்லை   தொடர்ந்து  வெற்றி பணம்  புகழ்   எனெ  தேடிக்கொண்டும்  ஓடிக்கொன்டும் இருக்கிறான்   இது மனித இயல்பு.  திருப்தி அடைந்தால் இறைவனாகி விடுவான்



நாம் என்றும் கனவுகளுக்காகவும்   இலட்சியங்களுக்காகவும்    ஓடவேண்டும்  நல்ல சுழலை உருவாக்கி நல்லபடி வாழ்வதற்கான  வழிமுறையை காட்டுவது  ஆன்மீகம் ஆகும்


. தோல்விகளையும் ரசிக்கப்பழகவேண்டும்  ஏனெனில்  மனித வாழ்வில்  வெற்றியைவிட தோல்வி தான்  அடிக்கடி வரும்  தோல்வியை கண்டு பயப்படாவிடில் தோல்வியால் துயரமோ  தடுமாற்றமோ  எமக்கு  வராது அதனையும் கடந்து  போய்விடலாம்



ஒரு வாழ்வு எப்படி அமைய வேண்டும்  எனெ கூறும் நூல்  சிலப்பதிகாரம். ஒரு சிறு தவறும்  வாழ்வை பாதிக்கும் எனக் கூறுகிறது.  அற வாழ்க்கை வாழவேண்டும்  அற வழி தப்பினால் அறம் கூற்றுவனாகும் எனெ   சொல்லப்படுகிறது



மனித  இனத்தில் உயர்வு தாழ்வு எனெ எதுவும் கிடையாது.   ஒருவனது நல்லசெயல்கள்  தீயசெயல்கள் தான் உயர்வு தாழ்வை  கணிக்கும் அளவு கோலாகும்.

அறம்  என்பது கூட்டல் கழித்தல் இல்லை
அறச்செயல்கள்  கூட செய்து  மறசெயல்  தீய செயல்    குறைய செய்து    அறம் கூடுவதனால்   தீயசெயலுக்குரிய தண்டனை கழிபடாது.  செய்த தீமைக்குரிய  தண்டனையும் செய்த நன்மைக்குரிய    நனமையையும் ஒருவன் அனுபவிக்க வேண்டும். 


மனிதன் தாழ்வு மனப்பாங்கை விட்டால்  பல அரிய செயல்களை செயலாம்.  திறமையுடன் கூடிய  முயற்சி   வெற்றியைத்தரும்  .தயக்கம்  தாமதம்   தாழ்வு  மனப்பான்மை   சோம்பல்   துக்கம் முயற்சியின்மை இவைதான்  மனிதன்  முன்னேற்றத்தடைகளாகும் இவை நம்மை கட்டிப்போடுகின்றன  .

No comments:

Post a Comment