Monday, November 18, 2013

பாரதியின் நோக்கு

பாரதியின் நோக்கு
பராசக்தியே   என்க்கு இந்த உலகில் உயர் அழகை ரசிக்க புரிய  பாட வைத்துள்ளாய்
அதனையிட்டு நான் மிகப்பெரிய புண்ணியசாலி    எல்லா மானிடனும் உயிரும்  உணவுக்கும்  தொழிலுக்கும் அலையும் போது  நான் மட்டும் அழகினை  இயற்கையை ரசிக்கிறேன்
எல்லா மானிடனும்  தன் குடும்பம் உற்றார் உறவு எனெ  சுயநலமாய்  சிந்தித்து  வருந்துகின்றனர் நானோ சமுதாய மாற்றம்   வளர வேண்டிய சமுதாய மாற்றங்கள்   பற்றியே  எண்ணுகிறேன்
புரட்சிகள்  சீர்திருத்தங்கள்  போர்கள்  சமுதாயத்தை  மாற்றத்தான் செய்யும்.,.
இச் செயல்  எளிதல்ல. பல முரண் பட்ட மனங்களை மாற்றுவது  எளிதல்ல
பல முரண் பட்ட மனங்களை  மாற்றுவது பெரும் பாறைகளை உடைப்பதுபோல
இளகல் உள்ள பாறைகளை  உடைக்கலாம்  பாறாங்கற்களை உடைக்கமுடியாது


புதிய பாரதி
விளக்கு கொன்டு ஒளியேற்றி  வீட்டினை ஒளி செய்கின்றோம்
பாரதியோ சொல் எனும் திரி கொண்டு கவிதை பாடல் கொண்டு சமுதாயத்திற்கு ஒளி ஊட்டினார்
பாரதி  கண்ட  புதுமையுகம்
பாரதி  கண்ட புதுமைப்பெண்
பாரதி கண்ட புதுமை புரட்சி
பாரதி கண்ட ஆயுதப் புரட்சி
 என எல்லா கனவுகளும் நிறை வேறின
எனினும்
எல்லா புரட்சிகளின் பின்னால்  போர் ,அணு அயுதம்  , வன்முறை, பொறுமை இன்மை சகிப்பு இன்மை இவற்றால் உலகம் இருளை நோக்கி  பயணிக்கிறது
 எனவே சமுதாய அக்கறைகொன்ட  புதிய பாரதி  உருவாகக் கனவு காண்கின்றென்

Saturday, October 19, 2013

கவிதை பக்கம்

                          கவிதை பக்கம்
-----------------------
நடனக்கலையின் மகத்துவம் பற்றிய ஒரு உணர்வு

--------------------------------------------------------------------------
நடனக்கலை

---------------------
மனித சமூகம் மேம்படவே அவனியிலே
மகிமை சேர் கலைதன்னை கண்டிடலாம்
மானிட சமூக வலைத் தடத்தை
மங்காது காத்ததும் எம் கவின்கலைகள்


உள்ளது உணர்வுதனை முனைப்புடன்
உண்மையான ஆற்றலுடன் கருத்துக்களும்
வினையாற்றல் தன்னூடு பெற்றிங்கு
வழிப்படுத்தும் நெறியாக தொடர்பு கொள்ளும்

தூய்மையின் பிறப்பிடமாம் ஆலயங்கள்
தூய கலை வளர்க்கும் களமதுவாகும்
மாக்களையும் மக்களாக வழிப்படுத்தும்
மாண்புறு அழகுடைய கலைகள்தான்

பயிற்சியுடன் பாவனையும் தந்தனவே
பலகலை வளர்ச்சியும் புவிதனிலே
பரதமுனி காட்டிய பரதக்கலை
பாவராக தளமாகின அவைதனிலே

தலம்தோறும் வளமான ஒவியமாய்
தாவியே படர்ந்து கோடிட்டு
கற்சிலை காட்டிடும் கலைஅழகு
காண்போர் களித்து மகிழ்ந்திடுவர்

இசையுடன் இயலினை சேர்த்திங்கு
இசையுறு கலையாகி ஒலித்தனவே
கலை வளர்க்கும் கலைஞன் மாண்புகள்
சிந்தையிலே சிந்தனையை நெருடிவிடும்

பரதமுனி தந்திட்ட பரதக்கலை
பாவமாய் அவைகளை அலங்கரிக்க
கட்சிதரும் அழகுறு நடனக்கலை
அவைதோறும் அவனியில் போற்றிடுவோம்
============================================

அழகு
---------
இயற்கையின் பேரின்பம்
--------------------------------------
அழகு அழகு  என்று  வியந்திட வைக்கும்
அழகு எனப் போற்றும்  உலக அழகு எத்தனை
அழகு தமிழிலில்  பேசுவது பேரின்பம்
அழகு இயற்கையை  ரசிப்பது  பேரின்பம்

வருடிச் செல்லும்  விசும் தென்றல்  ஓர் அழகு
வளைவுடன் நகர்ந்து பாய்ந்து வரும் நதியும் ஓர் அழகு
பச்சை கம்பளம்  விரித்ததுபோல் மலை சாரல் ஓர் அழகு
மலைமேல் யானை படுத்தது போல் படிந்த முகில் கூட்டம் ஓர் அழகு

வானத்தில்  இயற்கை  வரைந்த வானவில் ஓர்  அழகு
வானமதில்  பவனி வரும்  பல வர்ண முகில் கூட்டம் ஓர் அழகு
முகில் கூட்டம்   இடையே தோன்றும் வெண் மதியும் ஓர் அழகு
வானத்தில் மின்னுகின்ற மின்மினிகூட்டம் ஓர் அழகு

வானம் தொடும்  நவீன கட்டிடங்கள் ஓர் அழகு
வானத்தை  ஊடுருவும்  வான ஊர்தி  தரும்  இரைச்சலொலியும் அழகு
பூத்துக்குலுங்கும் வர்ணமிகு  மலர் கூட்டம் ஓர் அழகு
பூக்காது அசைந்தாடும் மரங்கள் ஓர் அழகு

இயற்கையோடு அமைந்த எம் வாழ்வு பேரின்பம்
இறைவன் படைப்பு  தரும்  இயற்கையே  பேரழகு


================================================
குழந்தைச் சிரிப்பு  ஒரு அழகின் சிரிப்பு

குவளை இதழ் பிரித்து   செவ்விதழ் தாள்  திறந்து
கன்னத்து குழி விழுந்து தாய் முகம் பார்த்துநிற்கும்
காட்டுமே மெல்லியதை முழு உலகும் காட்சி தரும்
இளகாத கல்  நெஞ்சும்  கவலை நீக்கி களிப்புறும்
2வாழ்வின் நெடும் தூரம்  கலக்கமிடும் இதயமதில்
தாள் தூக்கி முத்தமிட பஞ்சொத்த ச்பரிசமது
தெள்ளு தமிழ்  அழகுணர்வு காட்டிடும் குழந்தைமுகம்
கள்ளுரும் நெஞ்சமதில் தெவிட்டாது  தித்திக்கும்
3குழந்தையாய் தரணிதன்னில் பெரும் பேறாய் வாழ்ந்தபின்னர்
சலிப்புற்ற வாழ்க்கைக்கு உயிர் ஊட்டும்  ஒவியமாய்
தடாகத்து தாமரையாய் வீற்றிருக்கும் குழந்தைஅது
காட்டினிற்கும் புன்னகையோ கோடானு கோடி இன்பம்
4பாஞ்சாலி சிரிப்பதுவே தந்திடும் பாரதயுத்தம்
கன்னிகள் சிரிப்பொலியொ இளைஞ்ர் மனம் தடுமாறும்
எதிரிகள் நகை ஒலிகள் நெஞ்சமதில்  அனல் கொட்டும்
குழந்தை மென்சிரிப்பு  தந்துவிடும்   பேரின்பம்
5வையமதில் இறைவன் அவன் வைத்திட்டான்   பேரின்பம்
பையவே பல இன்பம் மனதினையே கொள்ளையிடும்
படைப்பதினில் பலசெல்வம்   காட்டினான் மாயனவன்
படைவெல்லும்  தரணி புகழ் செல்வம் ஒடுங்கிடும்   மழலை  சிரிப்பினில்
6அழகின் சிரிப்பொன்றை அவனியிலே கண்டிடேன்
அழகின் தென்றலாய்  தொட்டிலிலே  கண்டிடேன்
பழக ப்ழக பாலும் புளிக்குமென்பார்
தவழ்ந்திடும் குழந்தையோ தரணியின்  அழகின் சிரிப்பு

                    -------------------------------------------
காற்றே
காற்றே கைகளில் சிக்காது  வடிவத்தால்
உருவத்தால்  மானுடனின் பதுக்கலில் நீ தப்பினாய்
உணர்த்திடும் உன் அன்புக்கரம்
எம்மை வருடலில்  தென்றலாய்  தித்திப்பாய்
மானுட கொடுமையில் நீயும் தான் கொந்தளிப்பாய்
பொறுமையின் கொடுமை தாங்காது   நீயும் சீறிடுவாய்
பூமிதனில் இயற்கை தரும் காற்றாய்  வீசிடுவாய்
நீ கொடுக்கும் நன்மைகள் பல கோடி
மரண பயம் உனக்கில்லை
வீசா பாஷ்போட்  உனக்கில்லை
வெள்ளை கறுப்பு என்றும் இந்து முஷ்லிம் க்ரிஷ்டியன் என்றும்
ஜாதி மதம் என்ற வேறுபாடு கிடையாது
சூரியனிடம்தான் உனக்கென்ன பயம்
சூரியனை அண்மித்தால் சுடுமென்றும் இல்லை
மானுடனுக்கு உன்னால் அழிவு இல்லை
மானுடனால்தான் சமூக  சீரழிவு
அகழ்வாரை தாங்கும்  நிலம் போல     
மனித சமுதாயத்துக்கு   துணையானாய்
எனினும்  கோபப்பட்டால்  புயலாகி காட்டுவாய் உன்பிரதாபம்
நினது நிழல் நிலவட்டும்    புவிதனில்      தென்றலாய்              
                          ----------------------------------
 நாற்று
----------
பெரும்பயன்   நோக்கி   பெரிதும்   முயன்று
 
வழி  பலவூடு    பயணம்     சென்றிட

கலை  பலவற்றை    கற்றுத்தெளிந்திட

வலைபோல்   அமை ந்த    இன்னல்   தந்திடும்

தெளிந்த   உள்ளமும்  துணிவுறு   நடையும்

கற்றுத்  தந்திடும்   கலைக்கூடம்  சென்று

அன்னை மடி யினில்  தவழ்ந்த்திடும்      மதலை

தன்னை   மறந்து   களிப்புறச்செய்திடும்

வாழ்க    பாலகர்    கல்விக்கூடம்  என்றும்

வளர்க  பெரும்   வளத்துடன்  எங்கும்
-----------------------------------------------------------

இரசனை
ஒலியூடு    ஒருவாகும்   சொல்   இஙுகு
வலிவான  ந்யம்   கூடி   இசையாகும்
இசைதரும்  ஓசை  கவியாகி
இசைவுடனே  நன்கு  கலையாகும்

கலைகள்  பல  தன்னை   நாம்  கண்டிஙுகு
மலை னிகர்   உயர்வுடனே  மகிழ்வதுண்டு
கானமழை   தனிலே  களித்து   மாந்தர்
வானவெளி  செல்லும்  புள்ளாவர்

கலைதரும்   மேன்மை  அழகினிலே
கலைந்த   அனிச்சமும்  துளித்துவிடும்
பரந்த  உலகினை   பற்றிவிடும்
விரிந்த   கரம்  தான்  கலைக்குண்டு

உயர்ந்த   வாழ்க்கையும்   தாழ்வதுண்டு
மலர்ந்து   மணம்  வீசும்   கலை  மட்டும்
குன்று தோறாடும்  குமரன்  அழகு போல்
என்றுமே  தன்   உயர்வை   காட்டி  நிற்கும்

-------------------------------------------------------------------

அலை  பாயும்  ஆசை
-----------------------------------

வெட்ட  வான்வெளியில்    பறந்துவிடும்
வட்டமிடும்       வண்ணப்பறவைகளை
கண்டிடும்   கூட்டுக்கிளி   ஏக்கமுடன்
தன்  எண்ணச் சிறகினை  விரித்தனவே

வான்வெளியில்   பறந்துவிடும்    பறவைக்கு
வதிவிடப் பிரச்ச்னைகள்   பல  உண்டு
அடிந்திடும்   காற்றின்   திசைதோறும்
அடிபட்டு   அலைவதனை   அறியாதோ

பட்டான   அரவணைப்புடன்  கூட்டுக்கிளி
சிட்டான  பலவகை   உண்டியுடன்  
மெட்டான   வாழ்வுதனை   வாழ்வதனை
மட்டமாய்   எண்ணியது   கூட்டுக்கிளி

கூட்டுக்கிளிக்கு  ஒர்  ஆசை
பட்டுப்  போல்  சிறகினை   விரித்து
வான்வெளியில்   சுதந்திரமாய்
தானும்    பறந்திட   நினைத்ததுண்டு

கூட்டுக்கிளி   அறியாதே   வானவெளியின்  இடர்களை
வட்டமிடும்   வான்பறவை   படும் துன்பம்
கிடைத்திடும்   இன்பமதனை   உணராத   மானுடனும்
கூட்டுக்கிளி போல்  குமுறுகிறான்  ஏக்கமுடன்
-----------------------------------------------------------------------
கானல்  நீர்

பாலைவனம்   எனும்  வளைகுடா  நாட்டில்
பசுமையும்   வளமும்  கண்கவர்  அழகும்   உண்டு
சாலையில்   ஒடிடும்   வாகனமும்   வீதியில்
சாலையை   மேவி   பாய்ந்த்திடும்  நீரிலே

ஒருகணம்  நானும்   திகைத்திட்ட  வேளையில்
ஒளிமுறிவுற்ற  ஒளிக்கதிர்   வளியினுள்
தோன்றிடும்  கானல்நீர்   தான்   காட்டும்
தோன்றியதே   எமக்கிவ்வித   மாயா  பாயும்    நீரினை
--------------------------------------------------------------------------------

பாலைவன மழை

வான்மழை   பொய்த்த  வளைகுடா நாட்டில்
வான்மழை   அழகினை  அறிய வேண்டின்
சாலையில்  அமைந்திட்ட  குளிர்  பெட்டி  யிலே
சாரையாக  விசிறின  நீரின்  சிதறல்கள்
    
மாயை       வடிவம்   காட்டியே  எமக்கு
மழையின்  தன்மையை  உணர்த்தின
மழையின்  அழகினை   அறிய வேண்டின்
மாயை    நீரின்   சிதறல்கள் தான்
------------------------------------------------------------

புத்தம் புது  மலர்கள்

புலரும்  காலைப்பொழுதிலே  மாந்தர்
மலரும்    ஆரவாரிக்கும்   மழலை  மொழியுடன்
மகிழ்வுறு    வதனமும்   துள்ளும்   நடையுடன்
தளர்  நடை  நடக்க   புதுமலர் போன்று

பாலர்   பவ்விடயமாய்   பள்ளி  சென்றிடும்
பொலிவுறு  ஆடையும்  அணிகலன்  பூண்டு
பள்ளி  சென்றிடும்  மகழ்வுறு  காட்சி
துள்ளிட வைத்தன   மானிட  மனங்களை

கலை பலவற்றை   கற்றே  களித்திட
சாலைகள் தோறும்  பவனி வருவது
முகிழ்கின்ற   மலர்கள்  போன்ற அழகுடன்
மகிழ்ந்த்திட  வைத்தன  எம் புத்தம்  புது  மலர்கள்
------------------------------------------------------------------------------

பாலைவனமும்    பசுமையானது

பூமியே   தரையாகி   வானமே   கூரையாக
வாழும்     வழியே   நாமும்  அறிவோம்

தரையையும்   தொடாது   வானையும்     பார்க்காது
தந்திரமாய்   வாழும்  நெறி  உலகில் உண்டு

அந்தரத்தில்   சுந்தரமாக   வாழும்  வழிமுறை
அவனியிலே  இன்று   கிடைத்தற்  அரியது

தரையின்  விரிப்புடன்  தரணியின்   சுகம்   எல்லாம்
வரைவின்றி  கணந்தோறும்  நன்கு  புரிந்தன

பூமிதனில்  வாழ்வு  பெருமைகள்   நிறைந்தன
புரிந்திட்டேன்    களித்திட்டேன்  மகிழ்வுடன்  பலவாக

வீதிகள்  தோறும்   இந்திரலோகம்போல்
வியக்கும்  விளக்கொளியில்  ஒளிர்ந்தன

இடையூறு   ஏதும்  இல்லாது   எழிலுடன்    பவனி வரும்
இயந்திர  வாகனகளின்     ஓசையின்  இசையூடு

சுத்தம்  சுகமென்ற  வாக்கை  அறிந்திஙுகு
சுடுகின்ற  வெயிலும்   தென்றல்   போல் ஆகியது

வாகன சகிதம்  வல்ல  கனவான்கள்
வலம்  வரும்  காட்சி   அழகு  சொல்லிட  வார்த்தை  இல்லை

பணத்தின்   பெருமையும்   நாகரீக   வாழ்வும்
பலப்பல  முறை   வியந்து   களித்திட்டேன்

மாளிகையோ   மன்னர்  வாழ்  வதிவுடமோ
மானசமாய்   பாரட்டி  வியந்து   களித்திட்டேன்

சீர்வரிசை  பல  உண்டு  வியத்தகு  பொருள்  உண்டு
தெரிவு  செய்ய  தெரியாது   சொக்கிப் போய்  நின்றிட்டேன்

வாணிபத்தின்   திறமையும்   வணிக வளாக   அழகினை
அண்ணாந்து  பார்த்து    ஆச்சரியம்    கொண்டிடேன்

உலகத்து   அழகெல்லாம்    கொட்டி   பெருமை செய்த
பாலைவனத்து  பசுமையை   பாரினிலே  கண்டேனே

----------------------------------------------------------------------------------

இயற்கையை    வென்றிட்ட  மானுடன்

ஊண்   உடை  உறைவிடம்    தேவைகளென   நினைத்தேன்
ஊக்கமுடன்    அலைந்து   தேடினர்   நம்  முன்னோர்

புரிந்திட்டேன்    தேவைகள்   பலவென்று
புரியாத  பலவற்றை  கண்டிஙகு   அசந்திட்டேன்

பலபல  உணவுடன்   பேரும் புரியாது
பலவேறு    ருசிகளையும்     சுவைத்து  களித்திட்டேன்

இல்லத்தின்  தேவைகள்    பலவென்று  கண்டேனே
பலபல   பொருட்களையும்   கண்டே  மலைத்திட்டேன்

இயற்கையை வென்று  இனிய  நடை போடும்
செயற்கையின்   அதிசயத்தை  கண்டே  அசந்த்திடேன்

கொழுத்தும்  அனல்  போன்ற  வெயிலுமே  ந்ன்கு
கொழுந்துபோல்   தென்றலாக்கும்   குளிரூட்டி  விசிறிகள்  

பெருமைகள்   பலவாக  போற்றியே  வாழ்த்திட
அருமைகளை    அறிந்தேன்  பல்வேறு   விதமாக

தரையினை  இருக்கையாய்  அகதிகள்  அவலமுற
குதிரை போல்  பலவர்ண  இருக்கை  குசனுடன்

இருக்கையின்  அழகினை  விபரிக்க   விளக்கிட
பெரும்பெரும்   வார்த்தை  தேடியே  அலைந்திட்டேன்

கடல்நீரை   சுத்திகரித்து  குடிநீராய்   குடித்திடவும்
செயல்காட்டும்  வீரர் புகழ்  இயற்கையை  வென்றவர்கள்

பாதாள  குழாய் மூலம்  நீரினை  பாய்ச்சி
பாலைநிலங்களை   பசுமை நிறை  களனியாக்கும்

 பசுமை  புரட்சி   செய்யும்  மானுட வீரத்தை
வறுமை எனும்  அரக்கன்  கண்டே  ஒழித்திட்டான்

கானல் நீரைதோற்று விக்கும்  கண் பறிக்கும்  ஒளிக்கதிரை
பசுமையாக்கும்   செயலினை  விபரிக்க  வார்த்தை ஏது

மரத்தில்  அடங்கியது  மாமத யானை
மரத்துள்  அடங்கியது   மாமதயானை

இயற்கையுள்   அடங்கிய  மானுடன்
இயற்கையை  அடக்கிய  மானுடனாவான்

----------------------------------------------------------------------

கலை   தந்த  அழகியல்

மனித  சமூகம்  மகிமைபெற   அவனியிலே
மாண்புறு   கலை யினை   காணலாம்

மக்களின்  சமூக  தொடர்புகளை
மங்காது    காப்பதுவும்   கலைகளே

உள்ளத்து   உணர்வுகளின்   பிறப்பிடமே
உண்டான  ஆற்றலுடன்  கருத்துக்களும்

வினையாற்றல்    எல்லாமே   பெற்றிட்டு
வழிப்படுத்தும்   களமாகும்   கலைகள்தாம்

தூய்மையின்   பிறப்பிடமாம்   ஆலயங்கள்
தூய  கலை    வளர்க்கும்   சன்னிதானம்

மாக்களை   மனிதனாக   நெறிப்படுத்தும்
மாட்சிமை   நிறைந்த    அழகு நெறி

பல கலை  வளர்ச்சியினை   பூமியிலே
பயிற்சிகளும்  பாவனையும்   தந்திடுமே

பரதர் முனி  வளர்த்திட்ட பரதக்கலை
பாவ  ராக   தாள  பாங்கினை  கொண்டனவே

தலம்தோறும்  வளமான  ஒவியமாய்
பற்பல  கற்சிலை  காட்டிடும்  கலை அழகு

பாவமான  பரதக்கலை   அவைதோறும்
காண்போர்  களிக்கவே  வைத்துவிடும்

கலையோடு  சேர்ந்தமைந்த   மக்கள்  வாழ்வு
 சிலையாக  சிற்பமாக்கும்  கவின்  கலைகள்

----------------------------------------------------------

புன்னகை
----------------
பொன்னகைகள்  பல நான்  கண்டதுண்டு
பொன்னகையில் மயங்காத பெண்ணில்லை
பொன்னகையின்  ஒளியையே  விஞ்சி நிற்கும்
பெருந்தனமாம்    பொன்னகையே  புன்னகையே

பொல்லாப்பை நீக்கிவிடும்  இயற்கை ஆயுதம்
இயற்கையாய்  இறைவன் அளித்த சன்மானம்
மனித சமுதாய  இணைப்பின்  அத்திவாரம்
சமுதாய உறவின்  பாலம் புன்னகையே

பலபல உறவுகளை தோற்றிவிடும் புன்னகை
விலையில்லா  பெரும் சன்மானம் புன்னகை
நட்புறவு காட்டிவிடும்   பாலமாக
மனித சமுதாயத்தின்  பெரும் சக்தி புன்னகை

வசீகரிக்கும்  சக்தி உடைய  புன்னகை
வளம் கொழிக்கும்  பேரழகுடைய  புன்னகை
புதுமை பல காட்டும்  பண்பாளனாய்
பேரழகு குணமாம்   மனிதனுக்கு
---------------------------------------------------------------


ஒலி தரும்  ஊறுகள்
------------------------------
சப்தச் சுரமாகி   இவை  கானமாகி
சகலகலா  கலைஞ்யனின்  நாவில் ஊறி
புவனமதில்  பவனி வரும்  ஒலி சக்தி
பூவுலகில்  ஊறுகள் தருவதுண்டு

வாத்தியத்தில்  சுருதியிடில்   கானமாகும்
வசமாகும்  சுருதி போகில்  அலறல் ஆகும்
ஒத்து லயம் சுருதி பேணி  இசை அமைக்க
ஓங்கிவளர் இன்பமான கலை ஆகும்

ஒலியோடு  ஒத்தொடும் இசையே
ஒத்திசையா  இடர் களையும் தந்துவிடும்
ஒத்திசையா ஒலியேதான் ஒன்றாகி
ஒப்பற்ற அதிர்வாகி  இடர் ஆகும்

தொழில் சாலை  இரைச்சல் எமக்கூட்டும் 
தொல்லை தரு நலக்குறைவு எத்தனையோ
தொந்தரவு தந்தெமக்கு   தொடர்கின்ற
இடராகும்  ஒலியின்  இரைச்சல்கள்

வாகனங் கள் எழுப்பிவிடும்  ஓசைகளோ
வாழ்க்கை அமைதியை  அழித்துவிடும்
வேகமிகு ஒலிதரும்  தொல்லை நீக்கி
வேதமாய்  அமைதியினை  பேணிடுவீர்

அமைதி அமைதி என கூவிடுவர்
அவையோர் தாங்காது நொந்திடுவர்
ஆக்கம் தரும்  சக்தியாம் ஒலி வடிவம்
அவனியிலே  தரும்  இடர்  அளவில்லை

காப்போம்  என்றுமே  அமைதியினை
வென்றிடுவீர்  அமைதியினை  பேணிடவே
பெருமையுறு  அமைதி  நிலவிடவே
காத்திடுவோம்  அமைதி யினை அவனியிலே 

----------------------------------------------------------------------

முதுமை
-------------
மானுட வாழ்வு  பருவகால மாற்றம் போல்
மானுடன் எதிர் கொள்ளும்   இயற்கை நியதியே
வாழ்வின் இயற்கை விதிகளை   மீறிடின்
வாழும் புவிதான்  தாங்க முடியுமோ

ஆரோகண  அவரோகண     பருவ மாற்றம் 
மானிட வாழ்வின்  இயற்கை நியதியே
ஆரோகணத்தில் மானிடன்  இன்பமாகவும்
அவரோகணத்தில்  துன்பமாகவும்  இருப்பது

இளமைக்காலம்  தென்றலாய்  இனிக்க
முதுமைக்காலம்  புயலாய்  வெறுக்க
 வாழும் மனிதன்  எண்ணும் நினைவுகள்
வாழ்க்கை பரிணாமம் புரியாத விளைவுகள்

புவியின் பருவகால மாற்றம்  ஆண்டாண்டு தோன்றும்
வாழ்வின் பருவகால மாற்றம்   வாழ்வில் தோன்றும்
பருவ வேளை  கால  மாற்றங்கள்  இயற்கையின் நியதி
புரிந்திடின் வாழ்வு  தெவிட்டா இன்பம்

முதுமை     எனும்  அனுபவ முதுமையை
முதுமையில்  மக்களிடம் உபகாரியாய்  வாழ்ந்து
இளம்  தலை முறை     மககளின் வழிகாட்டியாய்  வாழ்ந்து
வளம் பல நலத்துடன்  வாழ்வீர் முதுயோர்
---------------------------------------------------------------

யுத்தம்
--------------
யுத்தம் யுத்தம் யுத்தம்

இனத்திடை தோன்றின இனவாத யுத்தம்
மொழியிடை தோன்றின மொழிபேத யுத்தம்
மண்ணிலே தோன்றின மண்ணாசை யுத்தம்
வல்லரசுகளிடையே தோன்றின வல்லமை உத்தம்

நிலை தடுமாறும்  அழிவுறு யுத்தங்கள்
பற்பல தோன்றிடின்  மானிட வாழ்வில்
யுத்த பேரிகை  முழங்கிடும் புவிதனில்
மானிட வாழ்வு யுத்த அழிவினில்

நிலையில்லா யுத்தம் பற்பல தொன்றிலும் 
புயலடித்து ஓய்ந்து தென்றலாய் மாறலாம்
மாந்தர் உளம்தனில் தோன்றிடும் யுத்தமோ
மனம் தடுமாறி  திடுக்கிட வைக்கும்

குருசேத்திர போர்போல் பல முறை தோன்றிடும்
ராமராவண போர் அடிக்கடி தோன்றிடும்
தடுமாற வைக்கும்  பலவகை யுத்தங்கள்
மாந்தர் வாழ்வினை  துயர்ருற வைத்திடும்

சூறாவளி  வேகமாய்  சுழ்ற்றிடும்  மனிதனை
பேராழீ அலை போல் குமுறி எழுந்திடும்
மலைகளால்  தோன்றும் வேகமிகு நதியாகி
மனங்களை அடித்து உழ்ன்று வளைந்து

கனமான உளந்தனை  அழுத்திப் பிழிந்து
ஆற்றுப்படை பாடலாய் தாலாட்டி மீட்டி
தடுமாறும் மனங் களை சீராட்டி செம்மையாய்
மாற்றிடும் ம்னித உள்ளம்  என்றும் குருசேத்திர களந்தான்

------------------------------------------------------------------------------

விடியல்
-------------
அதிகாலை நேரம் சேவல் கூவிடும்  வேளை
ஆதவன்  தன் துயில் நீங்கி அழகு கதிர்  ஒளி வீசி
கருநிற மேலாடை நீக்கி  வண்ணப் பட்டாடை அணிந்து
வானமெனும் மங்கையவள்  செந்நிறப் பொட்டு இட்டது போல்

அடிவானம் விட்டு மேலெழும்பி ஆதவன் உதயமாகின்றான்
பட்சிகள்  பரவசமாய் ஆர்ப்பரித்து மகிழ்ந்தன
இருள் நீங்கிய களிப்புடனெ பட்சிகள்
இனிய கானம் பாடி பாசுரம் இசைத்தன

தன் இனம் கூடி  ஆர்ப்பரித்து
தன் இளசுடன் கூடி குலவி களித்திடு
பல்வேரு திசை நோக்கி  பறந்திட்டு
பசி தீர்த்து  பாடியே  பறந்தன

ஆதவன் வரவின் அழகிலே 
பூவிதழ் புன்னகைத்து   பூ விரிக்க
வண்டின்ம்  மலர் விட்டு மலர் தாவி
தன் அழகுறு நாட்டியம் ஆடவும்

இசையோடு அர்த்தமாய்  நாட்டிய ம்  ஆடியே
தேனீக்கள் தேன் தேடி  பல்திசை ஓடவும்
ஆதவன் வரவினில்  பூவிதழ் ஆயிரம் மின்வலு ஒளியுடன்
அழகு  பூவித்ழ்  விரிய ஆயிரம் வண்டுகள் சூழ்ந்தன

மாந்தர்  தம் இருள் நீங்கிய காலையில்
மகதான விடியலுக்காய்  காத்திருக்க
பழை நாட்  துயரம் நீங்கிட 
புதுமைகள்தேடியே ஏக்கமுடன்

பசுமை புரட்சி ஆயுத புரட்சி  எனெ பல
பலவேறு  காணனி புரட்சிகள்  தேடி
விடியலை தேடியே  இரவெல்லாம்
விரும்பியே ஆவலுடன்  வரவேற்பர்
-------------------------------------------------
விடியல் பலர்வாழ்வில் வருவது
அதிகாலை நேரம் சேவல் கூவிடும்  வேளை
ஆதவன்  தன் துயில் நீங்கி அழகு கதிர்  ஒளி வீசி
கருநிற மேலாடை நீக்கி  வண்ணப் பட்டாடை அணிந்து

வானமெனும் மங்கையவள்  செந்நிறப் பொட்டு இட்டது போல்
அடிவானம் விட்டு மேலெழும்பி ஆதவன் உதயமாகின்றான்

பட்சிகள்  பரவசமாய் ஆர்ப்பரித்து மகிழ்ந்தன
இருள் நீங்கிய களிப்புடனெ பட்சிகள்
இனிய கானம் பாடி பாசுரம் இசைத்தன
தன் இனம் கூடி  ஆர்ப்பரித்து
தன் இளசுடன் கூடி குலவி களித்திடு
பல்வேரு திசை நோக்கி  பறந்திட்டு
பசி தீர்த்து  பாடியே  பறந்தன

ஆதவன் வரவின் அழகிலே 
பூவிதழ் புன்னகைத்து   பூ விரிக்க
வண்டின்ம்  மலர் விட்டு மலர் தாவி
தன் அழகுறு நாட்டியம் ஆடவும்
இசையோடு அர்த்தமாய்  நாட்டிய ம்  ஆடியே
தேனீக்கள் தேன் தேடி  பல்திசை ஓடவும்
ஆதவன் வரவினில்  பூவிதழ் ஆயிரம் மின்வலு ஒளியுடன்
அழகு  பூவித்ழ்  விரிய ஆயிரம் வண்டுகள் சூழ்ந்தன

மாந்தர்  தம் இருள் நீங்கிய காலையில்
மகதான விடியலுக்காய்  காத்திருக்க
பழை நாட்  துயரம் நீங்கிட 
புதுமைகள்தேடியே ஏக்கமுடன்
பசுமை புரட்சி ஆயுத புரட்சி  எனெ பல
பலவேறு  கணனி புரட்சிகள்  தேடி
விடியலை தேடியே  இரவெல்லாம்
விரும்பியே ஆவலுடன்  வரவேற்பர்

விடியல் பலர்வாழ்வில் வருவதுண்டு
ஏழையின் வாழ்வில் விடியல்  வறுமையாய்  விடியும்
துயரங் கள் வாழ்வில்  இன்பமாய்  மாறுவதுண்டு
கவிஞனின் விடியலில்   தினம் தோறும்
கற்பனை கவிதைகள்  தோன்றிவிடும்

------------------------------------------------------


இயற்கை
------------------
மாதாவின் கரங்களிலே  துள்ளிய   எம் வாழ்க்கை
மண்ணின் மைந்தனாகி  உருவெடுத்து
இயற்கை அன்னை கொண்ட பேரழகில்
இந்திர   லோகமதை  இன்புடனே  அனுபவித்து
                        
தந்திரமாக ந்ட்பங்களை   உருவாக்கி                                               
தரணிதனை  இன்பமுறு  உலகாக்கி
எண்ணி எண்ணி இதை நாம் வியக்கையிலே
எண்ணிலா இன்பங்கள் பொங்கிடுமே

எத்தனை கோடி இன்பம்  வைத்தாய்
எத்திக்கும்  இனிமைகள்  பொங்கிடவே
பஞ்சபூத  கலவையை கொண்டிங்கு
விஞ்சு புகழ் புவிதனை  காட்டினாயே

பலவிதமாய் புகழ்ந்திட வார்த்தை தேடி
வேதமாய்  மனமுருகி போற்றிடவே
கொள்ளை கொண்ட இயற்கை   உன் அழகு
பிள்ளை பிராயம் முதல்  வியப்புற்றோம்

உரைத்திட உணர்ந்திட நினைக்கையில்
கரையில்லா இன்பமது பொங்கினதே
பகல் பொழுதின் வெம்மையும்  இராப்பொழுதின்  தண்மையும்
இன்பமும் துன்பமும் கொண்டதுதான் 
இத்தரணி யேனவே  உணர்த்திடவும்
ஆதவனின்  அக்கினி    கதிர் வீச்சு
பால்நிலவின் ஒளியினிலே  ஒழிந்து நின்று
சுகமும் துக்கமும்  மாறி மாறி
சுடர் விட்டு நம்மிடையே தோன்றும் என்று


சொல்லாமல்  விளக்கிடும்  குருவாகியே எமக்கு
பொல்லாவினை  கொண்ட புவியேன புரிய வைக்கும்


நிலையில்லா வாழ்க்கை  அழிந்திடும்  எனினும்
மன அலை அலைந்து  ஓயாது துரத்திடும்
கடலில் தோன்றிடும் பேர் அலை போல்  மன அலைகள்
அடிக்கடி   அணைப்பதுபோல்   துரத்தும் மன அலைகள்
அலை ஒன்று இன்னொரு அலையை  துரத்துவதும் 
 சோர்வதுமாய்
மீண்டும்  பல முயற்சிகளை செய்து சோர்வதும்
 எழுவதும்
மீண்டும் மீண்டும் உய்ர்த்தெழும்  உணர்வுடனே 
அலைந்திடும்   மன அலைகள்                                        


மழை மேகம்  வானிலே  அலைந்தங்கு
காற்றின் அசைவாலே   சிதறுண்டு அலைவது போல்
வேகமாய்  மாந்தர் மன அலையும்  சிதறுண்டு
சோகமாய்  தள்ர்ந்து  உயிர்ப்பதுபோல்


ஆவலாய் பயனுற  வாழ்ந்திடவே  மானிடர்
ஆற்றிய முயற்சிகள்   பலகோடி மானிலத்தில்

----------------------------------------------


இயற்கையின் அழகு
-----------------------------------
வானுடன் போட்டியிடும்   மலைச் சாரல்
வானுயர  ஒங்கி வளர்   மலைக் கூட்டம்
தவித்திட்ட சுமை தாங்கா  முகில் கூட்டம்
தவிப்பு நீங்க   ஒதுங்கி நிற்கும்   முகில் கூட்டம்
கருணை கொண்ட மலைசாரல்  கரம்  நீட்டி
காதலுடன்  வரவேற்று  அணைத்துவிடும்
குடும்பசுமை   தாங்காத முகில் கூட்டம்
முதிர்குடும்ப   முகிலாகி  தன் உரு இழக்கும்

உரு இழந்த முகில் கூட்டம்  மழையாகி
மண்ணே கதியெனெ  பாய்ந்து வர
மண் மகளொ  காதலுடன்  உளம் குளிர்ந்து
மண்டியிட்டு பாசமுடன்  மனம் மகிழ்ந்தாள்

மழை மேகம்  படிந்திட்ட  மலை உச்சி மழை மேகம் நடனமிடும் தரை யாகும்

மழைமேக திரை சேலை  காற்றினால்  மலைக்களிலே  மயங்கி படிவதுண்டு

கொள்ளை கொண்ட மலைசாரல் உச்சிதனில்  கள்ளை உண்ட மாந்தர் போல்   புரண்டு விழும்

வெள்ளிநிலா   அதன் மேலே  உலாவரவும்   சுழ்ந்திடும்  பேரழகு     மலைதனிலே

கள்ளமற்ற  அருவிநீர்  பாய்ந்துவரும்  சுழ்ந்திடும்  ஆற்று  சிறு குன்றும்

பச்சை தரை விரிப்பு விரித்ததுபோல்      பாசி படர் கரையும்  வழுக்கிடுமே

விலங்கினம்  களிப்புடனே  ஒய்வாக   அமர்ந்திடும்   தரைபோல் மலைக்குன்று
விலகிட இடமில்லா    கல்பாறை  வியந்திடும்  உருவில்  கண்டிடலாம்

மலை குன்ற   வெளி தனிலே  வானமது  வரையா ஒவியமாய்  திகழ்ந்திடவும்
மாந்தர் வியப்புடன் அமர்ந்து அங்கே   கொள்ளை யிடும்  அழகை   ரசித்திடுவர்

இயற்கையாய் அமைந்த இந்த பேரழகு  இயல்பாய் போற்றிட வேண்டுமன்றோ

அழிவுறு மாந்தர்  அழகைவிட அழிவுறா    இயற்கை  பேரழகு தான்

------------------------------------------------------------------------------------------------


ஆலயம்

ஆன்மா லயப்படும் இடமாகி
ஆத்மா அழ்குற விளை யாடும்
ஆலயம்  இடம்தோறும் விளங்கிடவே
ஆவலுடன் மாந்தர் அமைத்திடுவர்

மனித சமூகம் அவனியிலே மேம்படவே
மகிமைசேர்   கலை பல கண்டிடலாம்
மக்களின் மாண்புறு  சிறப்புதனை
மங்காது காத்திடும் ஆலயங்கள்

மாக்களை மக்களாய் வழிப்படுத்த
 மானிடகலைகளை நெறிப்படுத்த
பயிற்சிகள் பாவனைகள் பல அங்கு
பாரினிலே தாங்கின ஆலயங்கள்

பரத முனி காட்டிய பரதகலை
பாவ ராக தாளமாகி நயமுடனே
தரணியது பாவனைகள் பலவாக
தார்மீக கலை காட்டும் ஆலயங்கள்

கற்சிலை காட்டினவே  சிற்பக்கலை
காவியமாய் காட்டின ஓவியங்கள்
நாவிதழ்கள் ஓதின  புராணங்கள்
தேடி தேடி  காட்டின ஆலயங்கள்

கோவில் இல்லா ஊரினிலே குடிகல் வேன்டாம்
பாவியில்லா ஊரினிலே பண்பு வாழும்
நாங்கலுடனே தரணியிலே வாழ்ந்திடவே
தேடி தேடி வண்ங்கிடவே ஆலயங்கள்

-----------------------------------------------------------------------------------

புதுமைகள்
---------------
வெள்ளத்தனையது மலர் நீட்டம்
  மாந்தர் சிந்தனை அளவு வள்ர்ச்சியன்றோ
கள்ளமற்ற நெஞ்சங்கள்  தான் உலகில்
காரியங்கள் பலவற்றை  தோற்றியது

பாரதி கம்பன் இளங்கோ போல்
தமிழை வளர்த்தனர்  பெரியொர்கள்
பாரதி கண்ட கனவன்றோ நம்மில்
புதுமைகள் பல இங்கு  புகுந்தனவே

பெண்கள் அடிமைகள்   என்று  கருதினர்
இன்று புதுயுகம் படைத்தது பெண்களன்றோ
பெண்ணடிமை நீங்கிடில்  உலகிலே
தன் நிகரில்லா சமுதாயம்  தோன்றிடுமே

விஞ்ஞானம்   விண்வெளி என்றும்  உலகிலே
 விந்தைகள் பல பல நேர்ந்தனவே
அஞ்ஞான இருளாம் பெண்ணடிமை  இங்கு
   நீங்கிடின்  உருவாகும்  எம் பெருமை

தமிழ்  வாழ வழிவகுத்த இலக்கியங்கள்
 தமிழன்  பெருமை பரப்பிவிடும்  உலகிலே
தமிழ் இலக்கியங்கள் காட்டும் வழி நெறிகள்
 காட்டிடுமே சமுதாய வளர்ச்சியினை

---------------------------------------------------------------------------------

தாய்  நிழல்
-------------------
தாயின் நிழல் தேடி  தாகமாய் அலைந்திட்டு
சேயின் குறைதீர குறைவில்லா பக்தியுடன்
பாகாய்  உருகி பாடினேன் பராசக்தி
பாகமாய் சிவனுக்கு உடனுறை சிவகாமியே

தரணியின் சுகங்களை சகலதும் அளித்திட்டு
தரணியின் துயர்களை கூடவே காட்டிட்டு
பரணிகள் பாடும் பாங்கினை அளித்திட்ட
பூரணியே உனை துதிதேன் அனுதினம்

மழலையில்  தாயின் அருள்கரம் காட்டி
கழலினை  நினைந்திட வழி நெறி காட்டி
புவிதனில்  தோன்றிடும் புகழ்பல காட்டி
கவிதனை பாடிட்டு துதிதிட வைத்தாய்

நினைத்திட நினைத்திட உருகுது மனமே
துதிதிட துதிதிட  பறந்தன துயற்கள்
படித்திட தந்தன    நின் பரவச தோற்றம்
மறக்கலும் இயலுமா நின்கழல் துணையினை

-----------------------------------------------------------------------

தமிழ் தாய் வணக்கம்
-----------------------------------

மரபுகள்  தாண்டிட பத்தினியாக
வரம்பு தீண்டினால்  தப்பிதம் என்று
மேடையில் முழங்கின செந்தமிழ்  இலக்கணம்
நீரோடையாய் தெளிந்த மாசில் புலமைகள்

புசித்திட  புரிந்திட  தவித்து நிற்கையில்
ரசித்திட்டோம்  களித்திட்டோம் அறிஞர் அவைதொறும்
நாவலர் நாவினில்   நர்த்தனமாகிய
நலம் பல  நிறைந்த  மறத்தமிழ் அன்னையே

ஆவலாய் நின்புகழ் பேசிட முயல்கையில்
ஆலாபனை செய்து மகிழ்ந்திட நினைக்கையில்
தவித்தோம் சொல்லொண்ணா சங்கடம் பலவாய்
தேடியே களைந்தாய் திரையிடும் போர்வையை

எளிமையாய் தோன்றின நினது தோற்றம்
களிகூர வைத்தன நினது சேயினை
மகிழ்ந்திட வைத்தன  நின் எழில் அழகு
புகழ்ந்திட வைத்தன  பொலிவுறு எளிமையை

தமிழ்  ஏடுகளில்  பரவிய நினது சிறப்பு
செழுமையுடன் கணனியில் தோன்றிட பதிதோம்
படித்திட கேட்டிட  சலித்திடும் மக்களை
தடுத்து நிறுத்தியே கேட்டிட வைத்தன

தமிழ் தாயே  உனக்கு      கோடி வணக்கங்கள்
தமிழ்தாயே   உன்புகழ் என்றும்      நிரந்தரம்
தமிழ்கவி  போற்றிடும்  இனிய தமிழ் மொழி
தமிழர்   வாழும்வரை   வாழும்  புகழுடன்


---------------------------------------------------------------------------
மேன்மைகொண்ட மனம் 

பாறைக்குள்  நீர்  சுனை இருக்கும்
பாலைவனத்துள் பசும் சோலை இருக்கும்
பாறாங்கல்லிலும்  மென்மை இருக்கும்
கல்னெஞ்னுள்ளும்    கனிந்த மனம் இருக்கும்
மென்மையான மனம்  மெலிந்திடும்
மென்மையான மனம்  தவித்திடும்
மென்மையான உள்ளம் சோர்ந்திடும்
மென்மையானமனம் படைத்தோர்  உயர்ந்தோர்
அன்பு கொன்ட உள்ளம் என்றும்
அடைக்க முடியாத வெள்ளமே
அன்பின்றி வாழும் மாந்தர் அவனியிலே
மண்னைவிட்டு போதல் என்றும் நன்று நன்று
அன்பு கொன்ட உள்ளம் பண்பின் சிகரம்
அன்புகொன்ட உள்ளம் வெள்ளை உள்ளம்
அன்புதான் உலகின் வழிகாட்டி
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்

--------------------------------------------------------------------------

மானம்

தன்மானம் காத்த   தலைவர் அவன்யில்
சிலர் உலகினில் பிறப்பதுண்டு
மானம் காத்த வீரனின் பெருமை
மாண்புடன் அவனியிலே நின்று பேசும்

பெண்பெற்ற   பெற்றோர்  மானம் என்றும்
அடிக்கடி போகும்  வரும்   உலகினில்
சன்மானம் தேடி அலையும்   மானிடமே
தன்மானம் தேடி வாழ்ந்திடுவோம்

---------------------------------------
கிள்ளாதே
பசும்தளிர் மேனி  பஞ்சிளர் மதலையை
பாசமுறு  சொல்லால் கதை பல கூறி
கற்பனை காவிய அழகிய உலகில்
பற்பல செயல்தனை செய்திடும் வேளையில்

சிற்பமாய் பல கலை வடித்திடும்  கலைஞனை
கடும்மொழி கூறி கலைய வைத்திடும்  மக்களே
இனிய சொல் பேசி இன்பமாய் வாழ்த்தியே
இனிய உலகினை ப்டைத்திட முயல்கையில்

கிள்ளாதே மனிதா  மனதை  கிள்ளாதெ

தந்திர மொழியுடன்  தாலாட்டு பாடும்
மந்திர மொழியுடன்  மகிழ்ந்திடும் மனிதினை
பற்பல செயல்களினை புரிந்திடும் வேளையில்
பாடி ஆடி களித்திடும்   இளம் தளிரினை

கிள்ளாதே மனிதா  மனதை  கிள்ளாதே
தேனித்ழ் மொழியால்  சிந்தை களித்திட
கற்பனை உலகில் களித்திடும் வீரரை
இன்புறும் மொழிதரும் இனித்திடும் சிந்தையை
வன்சொல் நீக்கியே  வாழ்த்துக்கள் பாடிடு


---------------------------------------------------------------------------

அழகு  அழகு 

அழகு அழகு என வியந்திடும்  உலகிலே
அழகு என போற்றிட  உலகில் எத்தனை அழகுகள்
அழகு தமிழில் பேசிட  அதில் ஓர் இன்பம்
அழகு இயற்கையை ரசித்திட அது ஓர் இன்பம்

தெளிந்த நீரோடையில் பாயும் அருவிகள் ஓர் அழகு
தெவிட்டாத நறுமண பூஞ் சோலை சாரலில்
தென்றல் வீசிட அலைந்திடும் மரக்கிளையில்
தத்திதத்தி பறந்திடும் புள்ளினம் ஓர் அழகு

வருடிச்செல்லும் தென்றல் ஓர் அழகு
பாய்ந்துவரும் நதி ஓர் அழகு
பச்சை கம்பளம் விரித்ததுபோல் மலைச்சாரல் ஓர் அழகு
யானைக்கூட்டம் போன்று  அசைந்த முகில் கொண்ட வானம் ஓர் அழகு

நறுமணம் கமிழ் அகில் புகை  ஓம குண்டம்
 அங்கு எழும் யாகத்தீ  ஓர் அழகு
வானுயர் நவீன கட்டட  கூட்டம் ஓர் அழகு
பூத்து குலுங்கும்  மலர் கிளைகள் ஓர் அழகு

 இயற்கை வகுத்த பேரழகு பல கோடி
செயற்கை தந்த அழகோ சில கோடி
இய்ற்கை வனப்பில்  உலக சிருட்டி
இயற்கை படைத்த அழகு பலபல கோடி
--------------------------------------------------------------------


தாய் நிழல்

தாயின் நிழல் தேடி தாகமாய் அலைந்திட்டு
சேயின் குறைதீர குறையில்லா பக்தியுடன்
பாகாய் உருகிப் பாடினேன் பாரசக்தி
பாகமாய் சிவனுக்கு உடன் உறை சிவகாமி

தரணியின் சுகங்களை சகலமும் அளித்திட்டு
தரணியின் துய்ர்களை கூடவே காட்டிட்டு
பரணிகள் பாடிடும் பாங்கினை  அளித்திட்ட
பூரணியே உனை நான்  துதித்தேன் அனுதினம்

மழலையில் தாயின் அருள் கரம் காட்டி
கழலினை நினைந்திட வழி நெறிகாட்டி
புவிதனில் தோன்றிடும் புகழ் பல காட்டி
கவிதனை பாடிட்டு துதிதிட வைத்தாய்

நினைத்திட நினைத்திட உருகுது மனமே
துதித்திட துதித்திட  பறந்தன துயர்கள்
படித்திட தந்தன நின் பரவச  தோற்றம்
மறக்கலும் இயலுமா நின்கழல் துணையினை

---------------------------------------------------------------------------

தமிழ் தாய் வணக்கம்

மரபு தாண்டாத பத்தினியாகியே
வரம்பு தீன்டினால் தப்பிதம் என்றே
மேடையில் முழங்கிய செந்தமிழ் மொழியது
நீரோடையாய் தெளிந்த மாசில் புலமையும்

புரிந்திடமுடியாது தவித்திட்ட வேளையில்
ரசித்திட்டோம் அவைதோறும்  இனிய தமிழினை
பண்டிதர் நாவினில் நர்த்தனமாகிய
பண்பாடு காத்திட்ட தாய் தமிழ் அன்னையை

ஆவலாய்  உன்புகழ் பேசிட முயல்கையில்
அழகிய பாடல் பாடி மகிழ்ந்திட நினைக்கையில்
தவித்தோம் சொல்லொணா சங்கடங்கள் அன்று
தாயே கலைந்தாய் திரையிடும் போர்வையை

எளிமையாய் தோன்றின நினழகுறு தோற்றம்
களிகூர வைத்தன நினது சேய்தனை
மகிழ்ந்திட வைத்தன நினது அழகும்
புகழ்ந்திட வைத்தன பொலிவுறு இளமையால்

தமிழ் ஏடுகளில்  பரவிய நினது சிறப்புகள்
செழுமையாய் கணனியில் தோன்றிட பதிதோம்
படித்திட கேட்டிட சலித்திடும் மாந்தரை
தடுத்து நிறுத்தியே  கேட்டிட  வைத்தன

தமிழ் தாயே எமது கோடி வணக்கங்கள்
தமிழ்தாய் என்றுமே நிரந்தரம் நிரந்தரம்
தமிழ் கவி போற்றிடும் இனிய தமிழ் மொழி
வளர்க வளர்க  அவைதனில் புகழுடன்

------------------------------------------------------------------------------------



தமிழ் தாய் பெற்றெடுத்த  தனயன்
----------------------------------------------------
தமிழ் தாய் பெற்றெடுத்த   ஞான முத்து
தமிழ் கவிஞர் போற்றும்   வைரமுத்து


கவிஞர் பெருமை  உலகு அறியும்  நின்
கவிதை  அழகும்  தமிழ்  அறியும்


தமிழினை  பேசிடும்   அழகிலும்
விகடமாய் சொல்லிடும் அழகிலும்


திகட்டாத செந்தமிழ் தேனாக
புகட்டுவீர்  கவிதை  தமிழினை


தேன் உண்டு மகிழும் வண்டுகளாய்
மானிடம் மயங்கின நின்கவியில்


தமிழ்தாய் பெற்றெடுத்த  வைரக்கல்
பாரத்தாய்  அணியும் பதக்கத்தில்


பிரமிக்க வைத்திடும்  பிரகாசமாய் 
உரசின மார்பினில்  கம்பீரமாய்


கண்டேன்  கண்டேன்  நினது கவிதையை
துவண்டேன்  நினது ஞான ஊற்றினில்


வழங்கிடும்  திறமை  புது புது கவிதையை
பாடிடு புதிய   நல்ல நன் நெறி சிந்தனை


படைத்திடும் நல்ல  கற்பனை  அழகுடன்
வளர்த்திடு  நமது  அருமை தமிழினை


தமிழ் தாய் வளர்த்திட காவியங்கள்
அமிழ்தாய் இனித்தன நின் பணியால்


சுவைத்திடேன்   கருத்து நிறை   கவிதையை
தவித்திட்டேன்  மீண்டிட இயலாது  இனிமையில்


உலகமே  எங்கும்  இன்பமயம் 
உலகமே கவிதை களஞ்சியம்


வாழ்க  நிவிர் பல்லண்டு வளமுடன்
வளர்க வளத்துடன்  வானளாவ


--------------------------------------------------------------


இறைவனின் படைப்பு
-----------------------------------
சமுதாயமும்  இயற்கையும்  ஒன்றை ஒன்று   பிணைந்தன
செயற்கையோ   இயற்கையை   மாற்றிட   முயன்றன

ஓடிவரும்  நதிகளோ கடலில் சங்கமிக்கும்
வீசிடும் தென்றல்  சுகத்தினை தோற்றிவிடும்
வானத்தில் சூரியன்  கிழக்கு மேற்காக வலம் வந்து பகலில் ஒளி தரும்
வென்ணிலவு வானத்தில்  வலம் வந்து  இரவினில் ஒளி தரும்

எதைக் கேட்டு  பூக்கள்  பூத்தன
யார்தான் பூவில்   நறுமண  மணத்தினை  வைத்தது
எதைக்கேட்டு பூக்கள்  காய் ஆகின
எப்படி காய்கள் கனி யாகின

இயற்கையாய் அமைந்த  இந்த பூவுலகில்
இனிமைகள் கோடி  இறைவன் வைத்தான்
வானத்துக்கு  சூரியன் அழகு
முகில் கூட்டத்துக்கு  வானம் அழகு
வெண்ணிலவு   வானத்தில்  பவனி வரும்
நீல வானம்   முகிலின்  வாழ்விடம்
சூரியனிடம்  பூக்களுக்கு  காதல்
வன்டினத்துக்கு   பூக்களில் காதல்
பூக்களும்  காயாக  மாறின   பின்பு
காய்கள்  கனியாகி கனிந்தன
கனிந்திடும்  கனிகளும்   மரத்தில்   நழுவிடும் அதுபோல்
கனித்திடும்  அன்பும்  இதயத்தில்   பெருகிடும்

சங்ககால முதலாக   சமுதாயம்  வளர்ந்தது
சங்ககால முதலாக  நட்பு   தொடர்ந்தது
சங்ககாலமுதலாக  அன்பு  வளர்ந்தது
சங்ககால முதலாக  மனித முயற்சிகள்  தொடர்கின்றன

விலை பேச முடியாதது    மனித நட்பு
விலை மதிக்க முடியாதது  மனிதநேயம்
----------------------------------------------------------

பண்பு கொண்ட மனம்
----------------------------------
பாறைக்குள்ளும்   நீர் ஊற்று இருக்கும்
பாலைவனத்துள்ளும்   பசும் சோலை இருக்கும்
பாறாங்கல்லிலும்   பலமிழந்த  வெடிப்பு இருக்கும்
கல் நெஞ்சிலும்  கனிந்த மனம் இருக்கும்

மென்மையான  உள்ளம்  தவித்திடும்
மென்மையான உள்ளம்  சோர்ந்திடும்
மென்மையான உள்ளம்  வருந்திடும்
மென்மைகொண்டமனிதன்  மேன்மையானவன்

அன்பு கொண்ட   மனித உள்ளம்  என்றுமே
அடிக்க முடியா  மடைதிறந்த   வெள்ளம்
அன்பில்லாமாந்தர் அவனியிலே    வாழ்வதிலும்
அவனியை விட்டு  போவது  நன்று நன்று

அன்பு கொண்ட உள்ளம்  வெள்ளை உள்ளம் 
அன்புகொண்ட உள்ளம்   பண்பின் சிகரம்
அன்புதான் உலகில்  வழிகாட்டி
அன்புக்கும் உண்டோ  அளவுகோல்

---------------------------------------------------------------------

  
   பிஞ்சு உள்ளம்
------------------------------

பசும் தளிர்  பாலர் இளம்  மனதினை
கசத்திடும்  கருத்துக்கள் கூறிட  வேண்டாம்
கற்பனை  காவிய உலகினில்   மிதக்கையில்
பற்பல  லீலைகள்  செய்திடும்வேளையில்
சிற்பமாய்  உருக்கும்  அழகு சிலைகளை
கடும் மொழி  பேசி கலைய வைத்திடாது
தேடும்    இன்மொழி கூறி  வளர்த்திடு


தந்திர  மொழியுடன்  தாலாட்டு பாடலாய்
மயக்கிடும் மொழியால்   அணைத்திடு  பாலனை
பாரிய செயல்கள்  புரிந்திடும்  பாலனை
பற்பல  சாதனை  புரிந்திடும்  தளிரினை
செவ்விதழ் மொழியால்  சிந்தைகளித்திட
செம்மொழி கூறி  களித்திட வைத்திடு
இன்புறு மொழி தரும்  இசைந்திடும்  சிந்தையை
இன்சொல் கூறி  வளம்பெற வைத்திடு

இனிய உளவாக  இன்னாதுகூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தது  போலாகும்

--------------------------------------------------------------------------


பால் நிலவு
--------------------

இயற்கையை ரசித்திடும்   மனிதனும்
இயற்றிடும்  கவிஞ்னும்  உனை மறந்ததுண்டா

கனியென பறித்திட  மயங்கிடும் 
கனிமொழி  மழலையை  கவர்ந்தனை
விண்ணிலே  தோன்றிய   நிலவினை
விஞ்ஞான ஆராய்ச்சி    புரிந்திட்டு
வியத்தகு கணனியில்    தொகுத்திட்டு
ஆராய்ந்து  பகுத்திட  வேண்டிடின்
வாய்த்த  எம் கணனியே  விளக்கிடும்
கவிஞ்ன்  வியந்து போற்றிய வெண்ணிலவு
கணணியில்  வியத்திட வைத்தன

---------------------------------------------------------------




      புவியின் அழகு
------------------------------

வானில் தோன்றும்  மின்னலென
தேனின் இனிமைபோல் தோன்றி
கானன்னீரின்   வெறுமையினை
நானிலம்  உணர  வைத்திடுமே

வாழ்வு   என்றிடும் மாயமான் 
பாழும் மனதில்  மாரீசனாய்
வீழும் பாறை  தகர்த்துபோல்
நழுவி நழுவி ஓட்டிவிடும்

வாழ்க்கைச் சுழலில் சிக்கிகிட்டு
வாழ்வினை  உயர  வாழ்ந்திட்டு
வாழும் நெறிதனை காட்டிடும்
வாழ்ந்த மகாத்மாக்கள்  தோன்றினரே

கவர்ந்திடும்  நம்மை  காந்தமென
தகர்த்திடும் மனதை சிறு துகளாய்
நகர்ந்திடும்  சுழலுரு  புயலாக
வாழ்வோம் அழகு   வாழ்க்கையினை

விண்ணை தொட்டிட  முயன்றிடின்
மண்ணை அடைந்திட துரத்திவிடும்
வண்ணமுறு  மண்ணின்   மனித வாழ்வு
கண்ணை மறைக்கும்  மாயங்களால் 

-------------------------------------------------------------------
 
    சகிப்பு
-----------------

சகிப்பு  என்றிடும்  நாலெழுத்து
தவியாய்  தவித்திட  வைத்திடுமே

போக்கிடம் இன்றி  வேகமாய் 
புதைத்திட   அவனியில்  வைத்திடும்

பூமியில் வாழ்வு   கணந்தோறும்
பூபாளம் பாடிட  முயல்கையில்

வென்றிடு  தடைகளை  சகிப்புடன்
பெற்றிடு  உயர்ந்திடும்  வாழ்வினை

உயர்ந்த  நல் மாந்தர்   வாழ்வு
உயர்ந்திட வைத்தது   சகிப்புதான்


-----------------------------------------------

Monday, September 23, 2013

தமிழ் கூறும் அறிவுரை


தமிழ் கூறும் அறிவுரை



சாதுக்கள் அமைதியானவர்கள் அன்பானவர்கள் என்றும் சந்திரனின் நிழல் போல் பிறரைக் குளிர்விப்பவர்கள்
இளமை செல்வம் ஆயுள் ஆகிய மூன்றும் தாமரை இலைமேல் நீர்த்துளிபோல நிலை யற்றது.

விவேகம் உடையவன் சூழ்நிலைசந்தர்ப்பங்களைஎதிர்பார்த்துவிழித்திருப்பான்.


உலவாழ்க்கையில் பிறர்க்கும் தனக்கும் துன்பம் உண்டாகாது வாழும் வாழ்க்கை சிறப்புடையதாகும்

.
தாம் கற்ற கல்வியை தனக்கும் பிற்ர்க்கும் பயன் படாது வீணாக்குபவன் வாழ்வு ஜடத்துக்கு சமமாகுவான்
.
எல்ல மனிதருக்கும் பிடித்தமானது அவர் உயிரும் தன்மானம் கௌரவம் ஆகியன.
போதும் என்ற மனம் இல்லாமை தொடர் துன்பங்க்ளை தரும்
.
எம்மைவிட சிறிய மனபாங்குடையவரிடம் உதவி கோருவது அற்பமான செயலாகும்
.
ஒருவரிடம் அடிமைப்பட்டு விலங்குபோல் பேச்சு உரிமை செயல் உரிமை இலாது இருப்பவர்கள் வாழ்வு நரகத்தை விட கொடுமையானது

பிறப்பு இறப்பு என்ற பந்தத்திலிருந்து விடுபடுவது நல்ல அறிஞருக்கு அழகு
.
நம்மை ஆசையானது சம்சார சாகரத்தில் சிக்க வைக்கிறது
.
நம்முடைய உண்மையான பகைவன் முயற்சியின்மையே
.
தர்மசிந்த்னை உள்ள மனத் தூய்மை
உள்ள ஆத்மா புண்ய ஆத்மா என்பர்
எத்தகைய இக்கட்டிலும் பிறரிடம் உதவி கோராது இருப்பது மிகச் சிறந்தது
.
சாதுக்களின் உபதேசமானது அமுதம் போல் காதுக்கு இனிமையானது

.
உலகில் நல்லது கெட்டது பிரித்தறியும் வாழ்க்கைநெறி உடையவர்கள் நல்ல அறிவாளிகளாவர்
.
கர்மாக்களால் பெற்ற நல்ல அறிவைப் பெற்றவன் மோட்சத்துக்கு வழி அமைக்கிறான்
.
அனைவராலும் விரும்பப்பட்டு தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதில் ஆர்வமுடையவராக இருப்பது உத்தமமான கொள்கையாகும்
.
தத்துவங்கள் சாத்திரங்கள் ஆகியவற்றில் புலமை பெற்று சீடனின் நன்மையில் நாட்டம் உள்ளவர் நல்ல குருவாவர் 
 
 நாம் என்றும் ஏழை மக்களிடம் கருணையும் நட்பும் கொண்டவர்களாக இருக்கவேன்டும்
உண்மை பேசுபவனாகவும் அன்பும் அடக்கமும் உடையவன்  எல்லா உயிர்களையும் தன்வசப்படுத்த முடியும்


கருணை உள்ளம் கொண்டவனை தேவர்களும் விரும்பி வணங்குவர்

சத்யம் பொறுமை கொண்டவன் எல்லா வெற்றிகளையும் பெறுவான்  தீய சிந்தை உடையவன் வாழ்வில் தாழ்வினை  பெறுவான்

மூடன்  நிம்மதியற்றவன்   செய் நன்றி மறந்தவன் சந்தேகப்பிராணி  ஆகியோருடைய ஆத்மா இறக்கும் தறுவாயில் துய்மைப்படுத்த முடியாது பலராலும் நிந்திக்கத்தக்க செயல் களை செய்யக்கூடாது

 பெற்றோர் வழிகாட்டலை  ஆசிரியர்  வழிகாட்டலை  முதியவர்கள்   வழிகாட்டலையும்  சமுதாயத்து இளைஞ்ர்கள்  பின்பற்ற வேண்டும். பெரியவர்களது அனுபவங்கள்  வாழ்வின் அரிய் பொக்கிசங்களாகும்
 
  
கருத்தரிப்பதெல்லாம்   பிள்ளைஅல்ல   கருத்தறிந்து    நடப்பதுவே   பிள்ளையாகும்

சிலர்  நாணல்    போல்   எல்லாருக்கும்   சலாம்   போட்டு   வாழ்வர்  சிலரோ   தென்னைமரம்  போல்   வளையாது   வாழ்நாள்   முழுவதும்    பிறருக்கு  உரமாய் இருந்து    தலைநிமிர்ந்து
பிறர்  பயன்பட  வாழ்வர்


உயர்ந்த   நோக்கோடு   தான்   கற்ற  அரிய கலையினை  மனித  சமுதாயத்தின்  ஆரோக்கிய வளர்ச்சிக்கு   பயன்படுத்தலே  மனிதனின்  அடிப்படை ஆவலாக  இருத்தல் வேண்டும்


*அருளாளர்கள்  தன்னை அறிந்தவர்கள்.  விருப்பு வெறுப்பு அற்றவர்கள் சிவத்தன்மை பெற்றவர்கள்.
 .திருவருளை அடைந்த தன்மையால்  தன்னை அடைந்தவர்களின் நலனைக்காக்கும் தன்மை பெற்றவர்கள் தன்னை அறிந்த  தத்துவ அறிஞர்கள். 
 பக்தர்களின்   நலனை க்காப்பதுடன்  அவர்களை பிடித்த வினைகளை தீர்ப்பதுடன் இனி புதிய வினைகள் அணுகாது காத்திடர்

மனிதன்     தான் செய்யும்     தவறுகளை     திருத்தாவிடில்     வாழ்க்கையில்   பெரும்    தோல்விகளை    சந்திக்கத் தோன்றும்



மானம்
----------
தன்மானம்   காத்திட்ட தலைவர்கள் 
தமிழராய் பூமியில் பிறப்பதுண்டு
மானம் காத்த வீரனின் பெருமை
மலை போல் அவனியில்  நிலைத்திருக்கும்

பெண்பெற்ற பெற்றோருக்கு   மானமென்பது
பாரினில்   போவதும் வருவதுமாக இருக்கும்
சன்மானம்  தேடி ஓடிடும்    மானுடமே
தன்மானம் காத்து வாழ்ந்திடுவாய்



பூகம்பம்
  பூமியும்  பொறுமை இழக்கும்
  பூமியும் சில மனிதர்களை போல   வெளித்தோற்றம்  அமைதியாக இருக்கும் . சலனம், அற்று   கவிஞர்களின் பாடலில்  அகழ்வாரைத்தாங்கும் நிலம் போல எனெ பாடுவர் .ஆனால் பூமியின்  நிகழ்வுகளை பார்க்கும் போது  இதனை எற்றுகொள்ளமுடியாது .  பூமியும் உள்ளெ  குமுறிக்கொண்டும்  கொந்தளித்துக்கொண்டும் தான் இருக்கிறது .பொறுமை இழந்த நிலையில்  கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  பூகம்பமாக வெடித்து  தனது  கோபத்தை வெளிப்படுத்துகிறது. எரிமலையாக வெடித்து  அதிஉயர் வெப்பதுடன் கூடிய  எரிமலை ஆறாக ஓடுகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல   இயற்கையாகிய பஞ்ச  பூதங்களாகிய  பூமி காற்று  நீர்  தீ வானம் ஆகியவையும்  பொறுமை இழக்கும்
கடலின்  வேதனையை கடல்  சிறிய அளவில்     இடை இடையே     காட்டும்  .  பொறுமை இழக்கும் நிலையில்   சுனாமியாகி   தனது  கோரத்தண்டவத்தை காட்டிவிடும்  .மனிதர்களை  கடலுக்குள் இழுத்து  பின்னர் கரையில் தள்ளிவிடும்
சுனாமி எற்பட்டபோது  கடல் கரையில்  தான்  எவ்வளவு மனித குவியல் கள்  மீன்குவியல் போல
வானம்    பொறுமை இழந்தால் மழை  அளவு மீறி பொறுமை இழக்கும் போது  பெரு மழையாகா  பூமியை  பெரு வெள்ளமாக  புரட்டிப் போடுகிறது
காற்றும் இது போல  தென்றாலாகவும்  குளிர் காற்றகவும்  மனிதனுக்கு  இன்பம் கொடுத்த  காற்று  சூறாவளியாக   பூமியில் பெரும் அழிவுகளை  காடும்  . 
தீ  மனிதன் நல்ல காரியங்களுக்கு  பயன் படுத்தும் போது  மகிழ்சியடையும் மனிதன்  சிலவேளை  தீமைக்கும் பயன் படுத்துகிறான்.  பொறுமை இழக்கும் வரை  அமைதியாக இருக்கும்.  ஆனால் பொறுமை இழக்கும் போதுதான்  காட்டுத்தீயாக  பூமியை பதம் பார்க்கிறது
இயற்கையே பொறுமை இழக்கிறது எனில்  மனிதன்  எப்படி பொறுமை  காப்பான்.  நல்ல மனித மனங்களை  காயப்படுத்தீர்கள்.  தீமையும் நன்மையும்  சேர்ந்திருக்கும்.  ஆனாலும்  முடிந்தவரை  நல்ல மனித இதயத்தை   காயப்படுத்தாதீர்கள்  .  நல்ல  உள்ளங்களின்  பொறுமையும்  இழந்தால்  பேரழிவுதான் .
 நல்ல மனிதர்   ஒருவர்  போதும்  மானுட  சமுதாயம்  வளர்ச்சிஅடையும்  . 
தீண்டாதே தீண்டாதே  நல்ல மனதை  தீண்டாதே
வாழ்த்துங்கள்  வாழ்த்துங்கள்  நல்ல  செயலை வாழ்த்துங்கள்
நன்மைகள்  கூடவும்  தீமைகள்  குறையவும்   பாடுபடுவோம்
எந்த ஒரு  தப்பான செயலுக்கும்  மனிதன்  இறப்புக்குள்  தண்டனை  அடைவான். சிலப்பதிகாரம்  கூறும்  உண்மையும் அதுவே . .அறம்  ,தர்மம் , அன்பு  நிலையானது.  பூமியைவிடவும்  நிலையானது  ,உறுதியானது.

Saturday, September 14, 2013

கற்பகதரு

கற்பகதரு
பொதுவாக வினாயகர் இடம் சுழியாகதும்பிக்கை உடையவர் ஆனால் பிள்ளையார்பட்டி வினாயகர் வலம்சுழிதும்பிக்கை  உடைய வராக இருப்பர் இந்த வினாயகர் கண்களாலே காட்சம் கொடுப்பவர் எனவே தான் கற்பகவினாயகர் என  அழைக்கப்படுகிறார் கற்பகதரு போல் கேட்டவரம் எல்லாம் அளிப்பவராக இருக்கிறர். அவரை வணங்குபவர்க்கு அவரது கனிவும் தெஜசும் பக்தர்களுக்கு அருளுகிறார்
பிள்ளையார் பட்டி வினாயகர் கோயில் குடவரைக்கோயில் .மலையைக்குடைந்து பல்லவமன்னால் கட்டப்பட்டது. அழகிய சிற்பங்கள் கோபுரங்கள் மண்டபங்கள் தூண்கள் கொண்டு கட்டப்பட்டது வடக்கு நோக்கிய வினாயகராக அருள் பாலிக்கிறார்
மகாபாரதம் எனும் இதிகாசம் வேத வியாசர் சொல்லச் சொல்ல வினாயகரால் எழுதப்பட்டது வேத வியாசர் வினாயகரை மகா பாரதம் எழுதச் சொல்ல வினாயகர் ஒரு வேண்டுகொள் விடுத்தார் கதையை நிறுத்தாது சொல்ல வேண்டும் என்றும்  நிறுத்தினால் அத்துடன் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்றதற்கு வியாசர் எழுதும்போது பொருள் விளங்கி எழுதும்படி கூறினார். வினாயகரும் ஒப்புக்கொண்டு பொருள் விளங்க எடுக்கும் நேரத்தில் கதையை சிந்தித்து  தொடர்ந்துசொல்லி கதையை வினாயகர் எழுதி முடித்தார் என்பர்
இப்படி வினாயகர் கதை எழுதும்போது வினாயகரின் எழுதுகோல் முறிவடைந்தது எழுதுவது தடைப்படக்கூடாது என்று தனது தந்தங்களில் ஒன்றினை முறித்து எழுதுகோல் ஆக்கினார் வினாயகர்
  எனவேதான்  இன்றும் வினாயகரின் தந்தத்தில் ஒன்று முறிவடைந்த நிலையில் இருக்கிறது இப்படியாக வினாயகர் மகாபாரதக்கதையை எழுதி முடித்தார்
வினாயகருக்கு அனேக நாமங்கள் உண்டு  எனினும் பிள்ளையார் எனும் நாமம் பிரசித்தமானது எல்லோரலும் விரும்பப்படுவது எம் கூப்பிட்ட குரலுக்கு குழந்தைபோல் ஓடி வரும் தெய்வமாக பிள்ளையார் விள்ங்குகிறார்
சிறுவர் முதல் முதுமை அறிஞ்ர் வரை விரும்பும் தெய்வமாக ஆற்றங்கரை அரசமரம் வீதிகள்தோறும்  விரும்பும் இடமெல்லாம் அமர்ந்து அருள் பாலிக்கிறார் சிவ பார்வதி மைந்தன் கீர்த்தி தரும் தெய்வமாக எம்மால் பொற்றி வணங்கப் படுகிறார் 
புதுக்கோட்டைக்கும் காரைக்குடிக்கும் இடையில் பிள்ளையார் பட்டி கோயில் அமர்ந்துள்ளது
வினாயகரை வேழமுகத்தோன் கணங்களுக்கு தலைவன் ஆகையால் கணபதி விக்கினங்களை நீக்குவதால் விக்கிநேச்வரன் தும்பிகை உடையமையால் தும்பிகையோன் என போற்றப்படுகிறார்
வினாயகர் துயரங்களால் தவிக்கும் பக்தர்களுக்கு வழிகாட்டும் குருவாகி பக்தர்களின் பக்திக்கு வசப்படும் தெய்வமாகி விளஙுகுகிறார் .நாமும் வழிபட்டு வளமும் பல நலமும் பெற்று  வணங்குவோமாக

வினாயகர்  துதி

ஒம்   என்னும்  பிரணவரூப   நாயகா
உமையாளின்   பாலனே  வினாயகா

தேவர் மூவர்  போற்றும்  தேவ   நாயகா
தேவாதி     தே  வனே    வினாயகா

வல்வினைகள்     நீக்கும்      சக்தி   நாயகா
வேண்டும்   வரும்    தந்திடும்    வினாயகா

மோனத்தின்     முழுப்பொருளே     விநாயகா
முக்கண்ணன்   மைந்தனே    விநாயகா

Wednesday, September 4, 2013

பெரியோர் அனுபவம்



சிவன் கோயில்
 தன்னைத்தானே புரிந்துகொண்டவன் தரணியைப் புரிந்துகொள்வான்
இயற்கையே பாதி இரவு பாதி பகல் அதுபோல் உலகில் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும் வாழ்க்கையில் சோகம் துக்கம் துயரம் மகிழ்சி நன்மையெனெ வரும்.

ஒருவர் மீது பொறாமை கொள்வதெனில் அவர் மீது திறமை, பெருமை, உயர்வு, நிச்சயமாக இருக்கும்.

நமது திறமைக்குச் சவாலாக இருக்கும்போது எதிர்ப்புக்கள் வரும் .அதனைக்கண்டு மனம் தளரக்கூடாது நிமிர்ந்துநின்று சவாலைச் சமாளிக்கவேண்டும்.

மனிதநேயம் உள்ளவரை மதிக்கப்படும்வரை மனிதநேயமுள்ள மனிதன் பெருகும்வரை மனிதநேயம் மனித சமுதாயத்தை காக்கும்.


கலைஞன் வெளித்தோற்றம் வேறு. நிஜம் வேறு கலைஞன் நல்ல களம் இடம் சூழல் வரவேற்பு இருந்தால் நன்கு சாதிப்பான்.

சிரிப்பு ஒரு அழ்கான கவிதை பூக்கள் மலர்வது சிரிப்பது போன்றது எனவேதான் பூக்கள் அழகாக இருக்கின்றன.

மானுடவாழ்க்கை இன்னல் நிறைந்தது எனவேதான் மானுடன் பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்கிறான்.

சிற்பிக்குள் வாழவிரும்பாத நீர்த்துளி ஒருபோதும் முத்தாவதில்லை.
பறப்பவன் சுவடுகள் எற்படுத்துவதில்லை நிலத்தில் நடப்பவன் தான் சுவடுகள் எற்படுத்துகிறான்.

பிரஜாபதி சகல மக்களையும் காப்பவன் பிரஜாபதி அவர் அரசன் கடவுள் பிரஜாபதி என அழைக்கப்படுவார்.
.
தமிழ் கலைகள் தமிழனின் முகவரி கலைகள் அழகின் இன்பத்தின் உறைவிடம் சுற்றி வர முட்கள் இருந்தும் ரோஜா சிரிக்கின்றது துன்பம் நேருகையில் வீணை எடுத்து மீட்டுவாயாக.

சொர்க்கம் சேர்க்கும் வழி பிறர் சொத்துக்கு ஆசைப் படாமை, பொய் சொல்லாமை, உதவி செய்யும் நிலை வந்தும் செய்யாமல் விடல், தண்டனைக்கு ஆழாக்கும்.

மனித சமுதாயம் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்
சத்தியம், பணிவு, கேள்வி ஞானம், ஒழுக்கம், ஆசார சீலம், பலம், வீரம். மனோபலம், தனம், தைரியம், பேச்சு வன்மை.

பூமியில் அடிக்கடி புயல் வரும் அதேபோல் வாழ்க்கையிலும் புயல் வரும் யாரையும் கேட்டுப் புயல் வருவதில்லை எமது சுய கட்டுப்பாடு தன்னம்பிக்கை நம்மைக் காக்கும்

குரு  இலட்சணம்   பகவானை அடையத்துடிக்கும்  பக்தர்களுக்கு வழி காட்டுபவர்.

பகவான் பக்தர்களின்  பக்திக்கு  வசப்படுவார்  தன்னம்பிக்கை உடைய எவரும் பிறரிடம் மண்டியிடத் தேவையில்லை. 

வெயிலின் அளவு கூடக்கூட நிழலின் அளவு குறையும்.  வலைகளின் அளவு கூடுவதால் மீன்களின் அளவு குறைவதில்லை. 

ஆன்மா லயிக்கும் இடம்  ஆலயம் இறைவன் குடிகொண்ட இல்லம் கோவில் என்பர். கோ என்றல் கடவுள், அரசன்.  இல் என்றால் இல்லம் கோவில் இறைவன் குடி கொண்ட இடம்.

பக்தருக்கு  இதயம் கற்கண்டு மாதிரி இருக்கவேண்டும்.  பார்க்க இறுக்கமாக இருந்தாலும் இனிப்பாக பாகாய் கரைந்து இளகிய மனம் கொண்டவர்களாய் இருக்கவேண்டும்

.பாலைவனத்தில் ஒட்டகம் வாழும் மிருகம் . அங்கு நீர் பற்றக்குறையை தவிர்க்க  அது நீரை சேமிக்கும் இயல்புடையது. அதுபோல் மானுடர்களாகிய நாமும் அறிவுத்திறனை தேடித்தேடி வளர்த்து எமது மூளை எனும் கொம்பூயூட்டரில் சேகரிக்க வேண்டும்  
உலகவாழ்வு ஞானேந்திரிய்ம் கர்மெந்திரியம் என்பனவற்றின் பாதிப்புக்கு உள்ளாகின்றது ஐம்புலன்களாகிய கண் காது மூக்கு வாய்  மெய் எனும் ஐம்புலன்களாலும் , அழுக்கு அவா வெகுளி இன்னச் சொல் மனம் சிந்தனை கோபம் போன்றவைகளால்  வாழ்வு சிதறுகின்றது. உலகில் இவையெல்லாம் இருந்துகொண்டுதான் இருக்கும்                
 படகு கடலில் மிதக்கின்றது .உப்பு நீராகிய கடல்நீர் படகுள் போகாது இருக்கும் வரை படகு மிதக்கும். ஆனால் கடநீர் சிறிது உள்ளேபோகுமானல் அது சிறிதுசிறுதாக கூடி இறுதியில் படகு கடலினுள் முழ்கிவிடும். அதுபோல் எம்மனதினுள்ளும் தீய சக்தி சிந்தனைகளை   புகவிடக்கூடாது புகவிட்டால்  அது படகு முழ்கியதுபோல் எம்மையும் அழித்துவிடும்  எம்மை சூழ்ந்து  நல்லது தீயது இருப்பினும் நல்லவற்றை மட்டும் எடுக்கப் பழகவென்டும்


தமிழ் மொழி ஆளுமை  சொல்வளம்  ஆழம் நிறைந்தது  தமிழ்  இலக்கியம் என்பது வாழ்க்கையின் இயல்பு செயல்பாடு  பேச்சுஇயல்பு  ஆகியவற்றை ஒரு தலை முறையிலிருந்து அடுத்த வரும் தலை முறைக்கு எடுத்து செல்பவை. இவை சமுதாய வளர்ச்சியிலும் ஒழுக்கத்திலும் அக்கறை காட்ட வேண்டும். இலக்கியமானது மானுட சமுதாயத்தை சிரிக்கவும் சிந்திக்கவும்  உதவ வேண்டும் வாழ்க்கை ஆகிய விஷத்தை அமுதமாக்குவது  கலைகளாகும்  வர்ணக்கலவைகளால் செய்யும் காவியம் . ஒவியம்.  வார்த்தைகளால் செய்யும் காவியம் கவிதை .  அங்கங்களின் நளின அசைவுக்ளால் செய்யும் காவியம் நடனம்.  கலைகள் மானுட சமுதாயத்துக்காக ஏற்ப்பட்டது பூக்களின் வாசம் பூக்களின் இயல்பை வெளிப்படுத்தும்  அதுபோல் நல்ல   கலைகள்   மானுட சமுதாயத்தின் இயல்பை     வெளிப்படுத்தவல்லன
பனித்துளியும் கடலை போய் சேருவதுதான் அதன் இலட்சியமாக கொண்டது  அதுபோல்  மனிதசமுதாயத்தை  இலக்கியங்க்ள்  வழிப்படுத்த வேண்டும்

தொழில் நுட்பம்  கண்டுபிடிப்பு என மக்கள் இன்று கூறுவது வள்ர்ச்சி என்பன  எம்  முன்னோர்கள் கூறியவை
இதயம் ஈர்ல் சிறுநீரகம்  நுரை ஈரல்  மாற்று சிகிச்சை   தொழில்னுட்பம் என்பர்  அன்றே சிவன்  விநாயகனின் உருவில் தலையையே யானை தலை ஆக்கினார்.  சூரன் வதை யில் தலைகளை மாற்றி  போரிட்டனர்
 இன்று செயற்கைமுறை  கருக்கட்டல்  சோதனைக்குழாய்  குழந்தை என்கிறார்கள் சாதனை  என்கிறார்கள்
அன்றே பாரதத்தில்  காந்தாரி  செயற்கை முறை 100  குழந்தைகளை  பெற்றெடுத்தனர
------------------------
1வைரமும்  கரியும் ஒரே  பூம்யில்தான் கிடைக்கின்றது  எனினும்  நீண்டனாள்  அமைதியாக  உறைந்து பொறுமை காத்த வைரம்  மானுடர் மகிழ்வுற  யொலிக்கின்றது
ஆனால்  கரியானது  அவதிப்பட்டு அமைதிஅற்று பொறுமையின்றி  அல்லல்பட்டமையால்   கரியாகி வெளிவந்து  நெருப்பினலும் விழுந்து எரிந்து தன் சுயரூபத்தை இழந்து அழிகின்றது
பொறுமைஉள்ள மனிதன் மின்னுகிறான்
பொறுமைஅற்ற் மனிதன்   அவலப்பட்டு அழிகின்றான்
2மரமானது  வெட்டுபவனை தாங்கி நீண்ட ஆணிவேரினால் நிலத்தில் நிலை கொள்கின்றது
அப்படியே நல்ல உயர் மனிதர்களும் பொறுமையாக இருந்து நிலையாக வாழ்கின்றனர்
3மரத்தின் கிளை வேர்களை பார்த்து நகைத்தது
நிலத்துள் மறைந்து
தண்ணீருக்கும் காற்றிற்கும் அவதிப்படுகிறாய் என்று
பூமியில் புயல் ஒன்று உருவாகியது
மரக்கிளைகள் ஆடியது ஆடியது
பின்னர் ஆடமுடியாது ஒடிந்து முறிந்தது
ஆந்த நேரத்தில் தென்றலையும் பெருமையையும்
 கூறிய மரக்கிளையின்  வாழ்க்கை முடிந்தது
அந்த நேரத்தில் வேரானது மரக்கிளையும் பார்த்து கூறியது  ஆணவம் செல்வச்செருக்கு கொண்ட பெருமை பேசும்
மக்களைப்போல உன் வாழ்க்கை முடிந்தது என்றது
என்னைப் பார் ஆடம்பரம் இல்லை எதோ கிடைக்கும் சிறிது உணவும் நீரும்  போதும் என்று பொறுமையுட்ன் மரத்தை தாங்கியவண்ணம் உடையாது முறியாது  மண்ணில்  நிலை கொள்ளச் செய்கின்றேன்
என்மரம் தொடர்ந்து வாழும்
இப்படியே பெரிய மனிதர்களின் தியாகம் சாதனை பொறுமை தன்சமுதாயத்தை தொடர்ந்து வாழ வைக்கிறது

--------------------------
எமது  பிள்ளைகளின் பிள்ளைப் பருவம்    முட்டைப் பருவம்
பிள்ளைகளின்  பள்ளிப்பருவம்  ம்யிர் கொட்டி
பிள்ளைகளின்   கல்லூரிப் பருவம்   கூட்டுப் புழு பருவம்
கல்லூரியினை விட்டு   வெளியேறும்போது  கூட்டுப் புழு சக்தி யெல்லாம் திரட்டி  உடைந்து வெளியேரும் பருவம் 
வண்ணத்துபூச்சியாக வெளியேறும்
வெளியேரும் வண்ணத்து பூச்சி பூங்காவினை அழகுபடித்துவதுபோல
மாணவர்கள் கல்லுரியினை விட்டு வெளியேறி உலகினை  அழகு படுத்த சமுதாயத்தை மாற்றி அமைக்க
உருவாகும்  மனிதசமுதயத்து  வண்ணத்துப்பூச்சிகள்
மென்மையாய் சுதந்திரமாய் பூவுக்கு பூ தாவி ஆடும் இளம் பட்டாம் பூச்சிகளே  எம்  குழந்தைகள்


துயரம்
-----------
துயரங்கள்  இயற்கை. சந்தோசம் மகிழ்ச்சி எப்ப்டி முக்கியமொ அதுபோல் துயரமும் நிலை யானது எல்லா இரவின் முடிவிலும் ஒரு   விடியல் வரும்..அதேபோல் விடியலும் அஷ்தமிக்கும் எனவே மனஙகளை மகிழ்ச்சி துயரம் கஷ்டம் இய்ற்கை நிஜதிகளென எல்லா நிகழ்விலும் இருபக்கங்கள் உண்டு  கடும் கும்மிருட்டு   கடந்து பின் கருக்கல்  கூடிய விடியல் வருவது போல விடியல் வரும் உச்சபோர் இறுதி கட்டப் போர் என்பன வந்தபின் கட்டாயம் அமைதி வரும் கோவில்களில்  சாமி வடக்கு வீதியில் வரும் போது திருவிழா நிறைவுறுவதுபோல  துயரங்கள் நிலையில்லாதது மனதை பிழிந்து வாட்டும் துயரங்கள் நிலைப்பதில்லை
எனவே மனித சமுதாயம்  துயரங்களில்  துவண்டுவிடாது   நிமிர்ந்து நிற்கும்   என துணிந்து கூறலாம்


நகை சுவை
---------------------
ஏளனம்  நகைப்பு  கவுரவகுறைவாக நடத்தல் நடப்பித்தல்   இவை தேவை இல்லாதது  ஆனால் நகைச்சுவையுணர்வுடன்  பேசும் நகைச்சுவை பிறரை சந்தொஷப்படுத்துமானால்  அந்த ந்கை ச்சுவை நன்மை உருவாக்கும்
 ஆனால் பிறரை புண்படுத்தும்  கஷ்டப்ப்டுத்தும் நகைச்சுவை  சமுதாயத்துக்கு  விஷ்மேயாகும்
முடிந்தவரை நன்மை பயக்கும் செயலை செய்ய வேண்டும்  நல்ல காரியங்கள் செய்யும் போது  பக்கவிளைவாக  தேவை இல்லாதது வரும்  சமையலின் போது புகை வரும் போது அதனை புகைகுழலால் வெளியெற்றவேன்டும் இல்லாவிடில்  புகை அறையினுள் பரவி கஷ்டப்படுத்தும்
அதுபோல்  நகைச்சுவை  மனித மனத்தை வேதனை ப்படுத்தக்கூடாது
 மனிதமனம்  ஒரு அனிச்ச மலர்   மனித இதயங்களை  அன்பு பண்பு அழகு மரியாதை பணிவு  போன்ற கவர்ச்சி நூலால் தைத்து  சமுதாயத்தின் உடலை மூடுங்கள்  அது  அணிபவர்க்கும்  பார்வையாளர்க்கும் சந்தோஷம் தரும்
மகிழ்ச்சி தரும்  மனிதமனங்களை  ஊசி கொண்ட குத்துவதாக  நகைச்சுவை  இருக்காது சமுதாயாதத்தை திருத்து  வழிகாட்டியாக இருக்கவேன்டும்

தலைமை
----------------
யுக புருசர்க்ள்  மத ரீதியான   தலைவர் களால்  உலகில்  மாற்றதை உருவாக்க முடியாது  பிறவிப்புத்திசாலிகளால்தான்  உருவாக்க முடியும். நேர்மையும்  அச்சமின்மையும்   எதிர்ப்பு குணங் லும்  ரத்தத்திலே  ஊறவேண்டும்  புத்திசாலிப் படைப்பாளிகளால்  தான் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கமுடியும்
சமுதாய மாற்றத்தை கொண்டு வரக்கூடியவர்கள்  அதி புத்தி சாலித்தனம்  நிறைந்த  தலைமைத்துவம்-

விதை
-----------
கட்டான் தரையில்  கல்   மண்  போன்ற நிலப்பரப்பில்   பயிர் செய்ய விதையை இட்டு  நேரத்தையும் விதையையும் வீனாக்குவது போல புரிந்துணர்வு அற்ற் மானிடனிடம்  உனது திறமை விதைகளை  போட்டு  மன வேதனை அடையாது 
பண்பட்ட போட்டதும் விளையக்கூடிய மண்ணை  ஒத்த  மானிடனிடம்  உனது திறமைகளைக்கூறி அவனை மேம்படுத்த உனது  அறிவை பயன் படுத்துவது  கேட்பவனுக்கும் ஆனந்தம்  அதைவிட  கூறுபவனுக்கு பேரானந்தம்
-----------------------------------------------------------------------------------------------

ரசிகன்
----------
இயற்கையின் ரசிகனும்  சிருஷ்டியின் சிருங்காரத்தின் ரசிகனும் தான் எழுத்தாளன்  கலைஞன் கவிஞன் .
இவர்கள் சாதாரண மனிதனிடம் இருந்து  ஒரு படி மேலே போனவர்கள்
உணர்வுகள்தான்    கற்பனையை உருவக்குகின்றது கற்ப்னை என்பது  மனஒட்டத்தின்  கனவு கற்பனைகதை களும்  பல உண்மைகளை அடக்கியது
ஆழ் கடலில்  அலைகள் எழுவதுபோல் மனம்  எனும்  ஆழ் கடலில் இருந்து  எண்ண அலைகள்  அலை அலையாக  பின்னிப் பிணைந்து திர்க்கமுடியாத சிக்கலாய்  உருவாகின்றது

      குளத்தில்  ஒரு கல்லை  போட்டதும்  எற்படும்  அலை பல அலைகளை  எழுப்பிவிடும்  அது போல் மக்கள் மனங்களில் விதைக்கும்  ஒரு சிந்தனை  பல எண்ணங்களை உருவாக்கும்  
யுகம் யுகமாய் மானிட வர்க்கத்தின் இயல்பை  மாற்றுவதி  செல்வத்திற்கு  பெரும் பங்குண்டு. செல்வம் பணம் பொருள்   மனித மனங்களை பெரிதளவு மாற்று கின்றது        

---------------------------------------------------------------------------------------
உலக நிதர்சனஙகள்

எந்த ஒரு துயரத்தையும்  குழப்பத்தையும்  துடைக்கும் சக்தி  இயற்கைக்கு உண்டு

உறக்கம் மனிதனுக்கு இன்பமும் சாந்தியும் அளிக்க வல்லது

கடல் அலை சர் சர் என கரையை நோக்கி அடிக்கும் லாவண்யம்  இயற்கை  எமக்கு அளிக்கும் இன்ப நிகழ்வு

இயற்கையும் ஒரு பொற்கொல்லன். மஞ்சள் நிற உடலில் தவளும் நீர் முத்துக்கள் தங்கத்தட்டில் வெண்முத்துக்களை பொருத்திய  அழகு அந்த உடல்  மின்னும் என்பது என்ன ஒரு கற்பனை

பெண்ணுக்கு சுதந்திரம்  அவள் அழகை  கெடுக்கிறது அடக்கம் அவள் அழகை கூட்டுகிறது அடக்கத்தில் சுதந்திரத்தை இழக்கும் பெண்களுக்கு மகத்தான  பெருமைஉறு சக்தி உருவாக்கின்றது


ஆட்களின் தொகையினால் மட்டும் ஒரு நகரம்  பாதுகாக்கப்படுவகில்லை அவர்களின் துணிவு  எச்சரிக்கை இவைகளால் காக்கப்ப்டுகிறது
வாழ்க்கையின் பெரும் பொறுப்புகளை எற்பவன்  தான் தலைவனாக முடியும்
பெரும் சாதனைகளின் அச்திவாரமே தியாகம் தான்
எந்த ஒரு கலைஞ்னுக்கும்  தொழிலாளிக்கும்  அவனது க்லைக்கும்  கடும் உழைப்புக்கும் வரவேற்பு கிடைக்கும் போது திருப்திஅடையும் போது அவனுக்கு அதை விட பெரிய ஊதியம் எதுவும் இல்லை
தீர்க்கதரிசிகளின் உத்தரவுகளும் சொல்லும் ஒரு வித இனம் புரியாத  சக்தியை அதாவது அபூர்வ சக்தியை கொண்டிருக்கும்

மனிதனை மனிதன் நம்ப வேண்டும்  நம்பாவிட்டால் வாழ்வது கச்டம் எனினும்  நம்பத்தகாத மனிதர்களும் உலகில் உண்டு

ஒருவருக்கு ஒருவர் சிந்தனைகள் வேறு அதை உணர்ந்து கொள்வதுதான் விவேகம்


அறிவு  விவெகத்தை  அளிப்பதில்லை தர்மத்துடன் கூடிய  அறிவுதான்  வளர்ச்சிஅடைகிறது

அறிவின் தெளிந்த ஒளிதான் விவேகம்
அதர்மம் அநீதி செயல்களை உடைய மனிதன்  ஒளி பெறுவதில்லை

வஞ்சகனாய் இருப்பவன் பெரு கோழையாக இருப்பான் அவன் பெரும் வஞ்சக செயல்களும் விவேகம் என நம்புகிறான்
அதர்மத்துக்கு  ஆரம்பம் வெற்றிதான் ஆனால் தர்மத்துக்கு வெற்றி மிக நிதானமாக வரும் அந்த நிதானம்  நிரந்தர சாதனைகளை தருகிறது
இதனை உலகம் புரிவதில்லை  புரிந்தால்  உலகம் மிக நன்றாக இருக்கும்


*மனிதன் அமைதிப்புறாவாக இருக்க வேண்டும்   வாழ்க்கை  தென்றலாகவும்  சுவையாகவும்  இனிமையாகவும் இருக்க வேண்டும்
*மனிதன் குழந்தை சிரிப்பும்  மென்மையான பேச்சும்  மிக நிதானமாகவும் இருக்க வேண்டும்
*மனதில்  எரிமலையும்  முகத்தில் குற்றால குளிர்ச்சியும்   ஆக இருப்பதற்கு  வாழ்க்கையின் சுமையும்  இடர்களும் தான்  காரணம்  வாழ்க்கை என்பது  ஒரு தெரியா புரியா  ரகசியம்
*வாழ்க்கை சில வேளைகலில்  கொடுமையாகவும்  சில வேளைகளில்  வியத்தகு  இன்பமாகவும் இருக்கிறது   இப்படி  புரிந்தும் புரியாமலும்   இருப்பதால்  இதுவே  பெரும்பாலான  திர்க்கதரிசிகளின் தேடலாய் இருக்கிறது

*இளம்  சிறாற்கள்  நாளைய சமுதாயத்தின்  முன்னோடிகள்
முதியோர்கள்   இளம் சிறார்களுக்கு  உரமாகவும்  வழிகாட்டியாகவும்  விளங்க வேண்டும்

*அறிவு இன்பம் இரண்டும் சேர்ந்தது வேதாந்தம். இன்பமற்ற  அறிவு கொண்ட வேதாந்தம் வறட்டு வேதாந்தம்

*ஆபத்து ஆள்பலத்தால்  மட்டும் சமாளிக்கப்படுவதில்லை  அறிவுப்பலத்தால் மட்டும் சமாளிக்கப்படுகிறது

*வாழ்க்கை  பரந்த கடலைப்போல  .சில வேளைகளில்  இன்பமாகவும்   பின்பு துன்பமாகவும்     அடிக்கடி மாறும்
கடலின் நிலைமையும்  சிலவேளை  கடல் சஞ்சாரத்துக்கு ஏற்றதாகவும்  சிலவேளை சொல்ல முடியாத கொந்தளிப்பையும்  தரும். கடல் அலை  
அடிக்கடி மாறும் தன்மை யானது  அதுபோல் வாழ்வும்  எப்படியும் மாறும்

*கவிஞன்    கவிதைக்கு இலக்கணம் வகுப்பவன்   உலகினை ரசிப்பவன் எவனும் கவிஞன் தான்  உணர்வுகள் கொந்தளிக்கும் மனப்பாங்கு  மனிதனை கவிஞாக்கிறது   அழகிகள் கவிகளின் இலக்கியம்  
பெண்ணின் அழகு   நதி அழகு  கடல் அழகு  மலர் அழகு  இயர்கையின் அழகு  கவிதை கூறத்தூண்டும் 

*வானமெனும் கூரையிலும் தரை எனும்  தரைக் கம்பளத்திலும்   இடையே  இயற்கையெனும்  எழில் கொண்ட  உலகம் உலவு கிறது  இந்த உலகில்தான்  என்னென்ன  காட்சிகள் கருமங்கள் கடமைகள்  செயல் வைபவங்கள்  மாறுபாடுகள்
இயற்கையின்  சிரிஷ்டி  மனித கற்பனை எண்ணங் களுக்கு அப்பாற்பட்ட  ஒரு அற்புதம்

*கனவு காண்பது  மனித இயற்கை அதனை உடைப்பது விதியின் இயற்கை இதுவே வாழ்வின் போக்கு

*மனிதசமுதாயத்துக்கு நம்பிக்கை வேண்டும்  நம்பிக்கை   அந்த பலம்  சித்ததுக்கும் சிந்தனைக்கும்  சக்தியை   கூட்டுகிறது
*மனித முயற்சிகள் பிரயத்தனங்கள்  பலவீனமானது இல்லை     ஆனால்  விதியின் வலிய கரத்துக்கு முன்னால்  அவை  அற்பமானது





*இசைக்கருவிகளும்   வாழ்வின் இயல்பை உணர்த்துவன  
நாதசவரம்  வாழ்க்கையில் ஓட்டை உள்ளவன் பிரகாசிக்கிறான்  நாதச்வரத்தின் ஓட்டைகளே காற்றின் துணைகொண்டு
னல்ல இசையை வழங்குகிறது
*தவில்  மேள வாத்தியம்  சம்பந்தமே இல்லாது சில மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்
அதுபோல் தவில்   .நிரபரதி  அடிபட்டுப்போகிறான்
ஒத்து வாத்தியம்  என்றுமே எல்லா இடமும்  ஒத்து போவது நல்லது  .அது தான்  சமுதாயத்தின் சமூக அமைப்பாகும்

*கனவுகள்
-------------
தூக்கத்தில் வருவது   துக்கத்தை கலைப்பது கனவல்ல
மனிதனை தூங்கவிடாது துரத்திக்க்கொன்டே இருப்பதுதான்  கனவு
மனித லட்சியத்தின்  விடியல்தான்  கனவு  .லட்சியமில்லா விடியல்கள்  வாழ்வின் தொலைந்த  பக்கங்கள்



மண்புழுவின்  இரத்தம்   வெள்ளை
பூச்சி இனங்களின்   இரத்தம்   கலர் இல்லை
ஆனால் மனித இரத்தம் கலர் சிவப்பு எல்லா மனித இரத்தில்  நிறம் சிவப்பாகையால் எல்லா மனிதனும்   அபத்தானவர்கள்  நாம் என்றும் எதிலும் எச்சரிகையுடன் இருக்கவேடும்







பூகம்பம்

  பூமியும்  பொறுமை இழக்கும்

  பூமியும் சில மனிதர்களை போல   வெளித்தோற்றம்  அமைதியாக இருக்கும் . சலனம், அற்று   கவிஞர்களின் பாடலில்  அகழ்வாரைத்தாங்கும் நிலம் போல எனெ பாடுவர் .ஆனால் பூமியின்  நிகழ்வுகளை பார்க்கும் போது  இதனை எற்றுகொள்ளமுடியாது .  பூமியும் உள்ளெ  குமுறிக்கொண்டும்  கொந்தளித்துக்கொண்டும் தான் இருக்கிறது .பொறுமை இழந்த நிலையில்  கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  பூகம்பமாக வெடித்து  தனது  கோபத்தை வெளிப்படுத்துகிறது. எரிமலையாக வெடித்து  அதிஉயர் வெப்பதுடன் கூடிய  எரிமலை ஆறாக ஓடுகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல   இயற்கையாகிய பஞ்ச  பூதங்களாகிய  பூமி காற்று  நீர்  தீ வானம் ஆகியவையும்  பொறுமை இழக்கும்


கடலின்  வேதனையை கடல்  சிறிய அளவில்     இடை இடையே     காட்டும்  .  பொறுமை இழக்கும் நிலையில்   சுனாமியாகி   தனது  கோரத்தண்டவத்தை காட்டிவிடும்  .மனிதர்களை  கடலுக்குள் இழுத்து  பின்னர் கரையில் தள்ளிவிடும்
சுனாமி எற்பட்டபோது  கடல் கரையில்  தான்  எவ்வளவு மனித குவியல் கள்  மீன்குவியல் போல


வானம்    பொறுமை இழந்தால் மழை  அளவு மீறி பொறுமை இழக்கும் போது  பெரு மழையாகா  பூமியை  பெரு வெள்ளமாக  புரட்டிப் போடுகிறது
காற்றும் இது போல  தென்றாலாகவும்  குளிர் காற்றகவும்  மனிதனுக்கு  இன்பம் கொடுத்த  காற்று  சூறாவளியாக   பூமியில் பெரும் அழிவுகளை  காடும்  . 


தீ  மனிதன் நல்ல காரியங்களுக்கு  பயன் படுத்தும் போது  மகிழ்சியடையும் மனிதன்  சிலவேளை  தீமைக்கும் பயன் படுத்துகிறான்.  பொறுமை இழக்கும் வரை  அமைதியாக இருக்கும்.  ஆனால் பொறுமை இழக்கும் போதுதான்  காட்டுத்தீயாக  பூமியை பதம் பார்க்கிறது


இயற்கையே பொறுமை இழக்கிறது எனில்  மனிதன்  எப்படி பொறுமை  காப்பான்.  நல்ல மனித மனங்களை  காயப்படுத்தீர்கள்.  தீமையும் நன்மையும்  சேர்ந்திருக்கும்.  ஆனாலும்  முடிந்தவரை  நல்ல மனித இதயத்தை   காயப்படுத்தாதீர்கள்  .  நல்ல  உள்ளங்களின்  பொறுமையும்  இழந்தால்  பேரழிவுதான் .

 நல்ல மனிதர்   ஒருவர்  போதும்  மானுட  சமுதாயம்  வளர்ச்சிஅடையும்  . 




தீண்டாதே தீண்டாதே  நல்ல மனதை  தீண்டாதே
வாழ்த்துங்கள்  வாழ்த்துங்கள்  நல்ல  செயலை வாழ்த்துங்கள்



நன்மைகள்  கூடவும்  தீமைகள்  குறையவும்   பாடுபடுவோம்
எந்த ஒரு  தப்பான செயலுக்கும்  மனிதன்  இறப்புக்குள்  தண்டனை  அடைவான். சிலப்பதிகாரம்  கூறும்  உண்மையும் அதுவே . .அறம்  ,தர்மம் , அன்பு  நிலையானது.  பூமியைவிடவும்  நிலையானது  ,உறுதியானது.




மனிதன் திருப்தியின்மையுடன் இருக்க  வடிவவமைக்கப் பட்டிருக்கிறான் 

எத்தனை சாதனைகள் வெற்றிகள்  மகிழ்ச்சி  உடையவனாக  இருந்தாலும்   மனிதன் திருப்தி அடைவதில்லை   தொடர்ந்து  வெற்றி பணம்  புகழ்   எனெ  தேடிக்கொண்டும்  ஓடிக்கொன்டும் இருக்கிறான்   இது மனித இயல்பு.  திருப்தி அடைந்தால் இறைவனாகி விடுவான்



நாம் என்றும் கனவுகளுக்காகவும்   இலட்சியங்களுக்காகவும்    ஓடவேண்டும்  நல்ல சுழலை உருவாக்கி நல்லபடி வாழ்வதற்கான  வழிமுறையை காட்டுவது  ஆன்மீகம் ஆகும்


. தோல்விகளையும் ரசிக்கப்பழகவேண்டும்  ஏனெனில்  மனித வாழ்வில்  வெற்றியைவிட தோல்வி தான்  அடிக்கடி வரும்  தோல்வியை கண்டு பயப்படாவிடில் தோல்வியால் துயரமோ  தடுமாற்றமோ  எமக்கு  வராது அதனையும் கடந்து  போய்விடலாம்



ஒரு வாழ்வு எப்படி அமைய வேண்டும்  எனெ கூறும் நூல்  சிலப்பதிகாரம். ஒரு சிறு தவறும்  வாழ்வை பாதிக்கும் எனக் கூறுகிறது.  அற வாழ்க்கை வாழவேண்டும்  அற வழி தப்பினால் அறம் கூற்றுவனாகும் எனெ   சொல்லப்படுகிறது



மனித  இனத்தில் உயர்வு தாழ்வு எனெ எதுவும் கிடையாது.   ஒருவனது நல்லசெயல்கள்  தீயசெயல்கள் தான் உயர்வு தாழ்வை  கணிக்கும் அளவு கோலாகும்.

அறம்  என்பது கூட்டல் கழித்தல் இல்லை
அறச்செயல்கள்  கூட செய்து  மறசெயல்  தீய செயல்    குறைய செய்து    அறம் கூடுவதனால்   தீயசெயலுக்குரிய தண்டனை கழிபடாது.  செய்த தீமைக்குரிய  தண்டனையும் செய்த நன்மைக்குரிய    நனமையையும் ஒருவன் அனுபவிக்க வேண்டும். 


மனிதன் தாழ்வு மனப்பாங்கை விட்டால்  பல அரிய செயல்களை செயலாம்.  திறமையுடன் கூடிய  முயற்சி   வெற்றியைத்தரும்  .தயக்கம்  தாமதம்   தாழ்வு  மனப்பான்மை   சோம்பல்   துக்கம் முயற்சியின்மை இவைதான்  மனிதன்  முன்னேற்றத்தடைகளாகும் இவை நம்மை கட்டிப்போடுகின்றன  .

தமிழ்க் கடவுள்




தமிழர் கடவுள் முருகன். தமிழர் உள்ள இடமெல்லாம் முருகன் இருப்பான்.  முத்தமிழின் தெய்வம் முருகன் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்திருப்பான் மொழி ஒரு பவித்திரமான செல்வம். அதை கையாளுகிறவரும் கையாளப்படுகிற பொருளும் உயர்தரமாக அமைந்துவிட்டால் பிறக்கும் இலக்கியமும்  சிறப்பாகும். முருகன்  குறிஞ்சிக் கடவுள் என்பர்  மலையும் மலை சார்ந்த இடங்களில் வசிப்பவன்.  முருகன் குடிகொண்ட  ஆறு படை வீடுகள்   பழனி,  சுவாமிமலை,  திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி,  பழமுதிர்சோலை என்பன.  அழகும் வீரமும் ஞானமும் முத்தியும் தரும் கடவுள் முருகன்

கந்தபுராணம்      உற்பத்திக்காண்டம்  தட்ச காண்டம்,  அசுர காண்டம்,   தேவ காண்டம்,  மகேந்திர காண்டம், யுத்த காண்டம்  என  ஆறு காண்டங்கள்    கொண்டது.   இந்நூல்    திருக்கைலாயம்    தொடக்கம்  வள்ளி திருமணம் வரை  141 படலங்களும் 14345   பாடல்களும்   கொண்டது  கந்தபுராணம்.   
கந்தபுராணம்,  "திகட சக்கர"  என முருகனால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டது.   கச்சியப்ப சிவாசாரியாரால்   இயற்றப்பட்டது  . இந்நூல்  கந்தப்பெருமானைப்  பற்றிய புராணம்  ஆகும்.

தேவர்கள்   அசுரர்களினால் துயருகின்றனர். தேவர்கள் தலைவன் இந்திரன்  தனது தேவகணங்களுடன் தாரகாசூரனால்  ஏற்படும் துன்பகளைச் சிவனிடம் சென்று  அழுது முறையிடுகின்றனர். சிவனும் தேவர்கள் துயர் துடைக்க ஆற்றலும் திறமையும் கொண்ட கார்த்திகேயனைத்  தோற்றுவிக்கிறார்.

கார்த்திகேயன் பிறப்பிற்காகச் சிவ பார்வதி திருமணம் நடக்கின்றது. பார்வதியை உலக சிருஷ்டியை  உருவாக்கும்  சக்தி உடைய ஆதிசக்தியாக உருவாக்குகிறர் சிவன். பார்வதியாகிய நிலையில் சிருஷ்டியின் சக்தியை பார்வதியால்  இயலாது எனவேதான் சிவன் பார்வதியை ஆதிசக்தியாகிய ஆதிபராசக்தியாக  உருவக்கினார் சிவன். ஆதி சக்தியின் ஆசியுடன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து அனல்பொறி உருவாகி அது அக்னிப் பிழம்பபாக, சிவன் கங்காதேவியிடம் கொடுத்துக் குளிர்விக்க அதனைக் கங்காதேவி  பூமாதேவியிடம் கொடுத்தார். அதுவே பூமியில்  ஆறு துண்டங்களாகிச்  சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலரில் ஆறு பாலகர்களாகின.

இந்த ஆறு குழந்தைகள் கிரித்திகா லோகத்துக் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்படுகின்றனர். கார்த்திகைப் பெண்களால்  அன்புடனும் பெருமையுடனும் சீராட்டித் தாலாட்டி  வளர்க்கப்படுகிறார் இந்த சிவமைந்தன் கார்த்திகேயன்.

ஆனால்  தாயாகிய ஆதிசக்தி தனது குழந்தையை நினைந்து கவலையுற்று சிவனிடம் வினவுகின்றார்.  சிவனும் ஆதிசக்தியின் கவலை போக்கக்  கார்த்திகை பெண்கள் மூலம் குழ்ந்தைகளை கொண்டுவந்து தாயாகிய ஆதிசக்தியிடம்  காட்டுகின்றனர். தாயாகிய ஆதிசக்தி அக்குழந்தைகளை ஒன்றாக அணைக்க ஆறு குழ்ந்தைகளும் ஒருகுழந்தை ஆகின. அக்குழந்தையே ஆறுமுகனாகியது அதற்கு சிவன், குகன் என பெயரிட்டார்.  கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டமையால்  கார்த்திகேயன் எனவும் அழைக்கப்படுவார் எனக் கூறினார். எனவே  குமரக் கடவுளுக்கு ஆதிசக்தி, கங்காதேவி, பூமாதேவி, ஆறு கார்த்திகைப் பெண்களென  ஒன்பது தேவியர் தாயாகினர்.

இந்தக் குமரக்கடவுள்  தேவர் குறை தீர்க்க ஆதிசக்தியால் தோற்றுவிக்கப்பட்டவர். எல்லா சிருஷ்டியுமே ஏதாவது காரணத்துக்காகவே உருவக்கப்படுகின்றது. பஞ்ச பூதங்களுக்கும் சிவனே அதிபதி .இயற்கையின் படைப்பு பஞ்ச பூதங்களின் கலவையாக உள்ளது. இயற்கை பஞ்ச பூதங்களாகிய நிலம் நீர் காற்று ஆகாயம் அக்னி  என  ஐந்தும் சமநிலையில் இருக்கும். இதில் ஏதாவது குறைவு எற்பட்டாலும் சமநிலை பாதிக்கும். இயற்கையின் சிருஷ்டி பஞ்ச பூதங்களை கடந்து எதுவும் இல்லை.

குமாரக் கடவுள்  கார்த்திகேயனுக்குச் சிவனின் ஆணைப்படி நந்தியெம் பெருமானால் யுத்தக்கலை போதிக்கப்படுகிறது. ஆதிசக்தியானவர் மகனின் யுத்த பயிற்சியின் திறமை கண்டு பெருமை அடைகிறார். மகனின் ஆற்றலில்  திருப்தியுற்றுத்  தேவர்களைத் தாரகாசூரனின் பிடியிலிருந்து காக்க ஆசி வழங்குகிறார். குமார கடவுளுக்கு  சொர்க்க லோகத்தை அசுரர் பிடியிலிருந்து விடுவிக்க குமரக்கடவுள் யுத்தத்துக்கு தயார் ஆகின்றார்.
யுத்தத்துக்கு தயாரான கார்த்திகேயனுக்குச்  சிவனின் ஆச்சாரியர்களால்  தேவசேனாதிபதி பட்டம் கட்டப்படுகிறது சிவச்சாரியர்களால் அபிசேகம் செய்து முடி சூட்டப்படுகிறது.  பின்னர் பிரமனால் தண்டாயுதமும், சிவனால் படைக்கலமும், விஷ்ணுவால் மணிமுடி கவசங்களும்  கொடுக்கப்படுகிறது தேவேந்திரனால் மயில் வாகனமும் அளிக்கப்படுகிறது.

வேல் ஆற்றலின் இருப்பிடம். இதனை ஆதிசக்தி அன்னை மைந்தன் கார்த்திகேயனுக்குக் கொடுத்து யுத்ததில் வெற்றி பெற  ஆசீர்வதிக்கிறர் தேவியின் வேலாயுதம் சக்தியும் ஆற்றலும் திறமையும் மிக்கது  தாரகாசூரனை வெல்வதற்குத் தேவகணங்களுடன் செல்லும் கார்த்திகேயனை  ஆசி வழங்கி அனுப்பிவைக்கிறார்.
உள்ளத்தினில் எழும் வினாக்களுக்கு விடை காணவும் சங்கடங்களுக்குரிய தீர்வையும் உன்னுள் இருக்கும் ஞானத்தால் உணரவேண்டும். யாரும் உனக்கு உதவ முடியாது என ஆசி வழங்கிக் கார்த்திகேயனை வெற்றியுடன் வரும்படி ஆசீர்வத்திது "விஜயீபவ" என ஆசி அருள்கிறார்  அன்னை ஆதிசக்தி.



திகட சக்கரச் செம்முகம் ஐந்துள்ளான்
சகடச் சக்கரத் தாமரை  நாயகன்
அகடச்சக்கர விண்மணி யாவுரை
விகட சக்கரன் மெய்பதம் பொற்றுவோன்



கேட்டவரம்மெல்லாம் தருபவன் குமரக்கடவுளென்ற அழகிய நெறியினையும் எமது கருணாநிதியாகிய  குமரக்கடவுளிடம் இராமலிங்க சுவாமிகள் பிரார்த்தனை  செய்து பாடியபாடல் இது


ஒருமைஉடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்கவேண்டும்
பெருநெறி பிடித் துழுக வேண்டும்
மதமான  பெய் பிடியாது இருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாது இருக்கவேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதிவேண்டும்
நொயற்ற வாழ்வில்நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தக்கொட்டத்துள் வளர்
தலமோங்கும் கந்தவேளெ
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே


தமிழில் அமைந்த முருகன்
பேசும் தமிழில் சொல்லும் சொல்லில் தமிழ்  உள்ளது
அழகு தமிழிலில் முருகன் .உள்ளான் முத்தமிழ் இருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான்
முத்தமிழ் முருகன் அழகன். என்வே தான் எம் தமிழில் படிக்க படிக்க சுவைக்க ரசிக்க இனிமை தரும்
சங்க இலக்கியங்களை படிக்கவும் அதன் கருத்துக்களும் எந்நிலையிலும் இன்புற வைக்கும்
ஆறுமுகன் முகங்கள் ஆறு  அதுபோல் வல்லினம்  கசடதபற ,  மெல்லினம் ஞயஜநமன ,  இடையினம்  யறரவலழ என்பதாகும்.
உயிர் எழுத்து 12  மெய்யெழுத்து 18  .அதுபோல்  முருகன்  கரங்கள் பன்னிரண்டு  சிரங்கள் ஆறு  சேர்ந்து  18 ஆகின்றது
முருகன்  சிவனின் ஆறுவகை முகங்களான  ஈசானம் ., தற்புருடம் .,.அத்வதம் ., சாமவேதம்..,சத்தியாசோதம், 
அத்துடன்   இறைவனின் அதோமுகம்   ஆக  ஆறுமுகத்துடன்  சரவணபவனாக  உள்ளார்  சிவன்  நமசிவாயா எனும்  பஞ்சாட்சரம்  எனவும்   முருகன்   சடாச்சரம்   எனவும் அழைக்கப்படுகிறார்கள்
முருகன் எனும் பெயரில்  மு  மெல்லினம் ,  ரு   இடையினம்,  க வல்லினம், எனும் முத்தமிழில் முருகன் பெயர் அழகு பெறுகிறது
இறைவன் அருளால் கிடைத்த மானிடப்பிறவியை   ஞானமும்
கல்வியும் அமர்ந்த ஞான வாழ்க்கை வாழ்ந்து  தானமும்  தவமும் இயற்றி  சமுதாயம் சிறப்புற வாழ்பவனுக்கு
வானவர்  நாடு  வழிதிறந்திடுமே
வாழ்க்கை என்பது ஒரு பெரிய சுரங்கம் அதனுள் எத்தனை பெரிய  தத்துவங்கள் நிறைந்தது  எப்ப்டியும் வாழலாம் 
எனினும் மனித சமுதாயத்தவக்கு  பயன்பெற வாழ்ந்து     உழைத்து   சீர்திருத்தம் பெற உதவ வேண்டுவஅ
வாழும் மனிதனின்  கடமையாகும்

நவராத்திரி
நவராத்திரி      ஒரு   அம்மனை  வேண்டி    சைவ   மக்களால்   வணங்கப்படும்
விழாவாகும்.   இது    ஒன்பது   நாட்கள்   வழிபட்டு   கடைசி நாள்    விஜயதசமி
என   வழிபடுவர்
 

Friday, August 23, 2013

திருக்குறள்



 திருக்குறள்

வான்புகழ் வள்ளுவனை உலகினுக்கே தந்து பெருமைஉற்றது   தமிழ்நாடு



தினைத் துணை நன்றி செயினும்  பனைத்துணையாக்
கொள்வோர் பயன் தெரிவர்

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்  தக

நகையீகை இன்சொல் இகழாமை நான்கும் 
வகை யென்ப வாய்மைக் குடிக்கு

நன்றறி வாரிர் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியோடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து



பிறர் பழியும் தம்பழியும் நாணுவர் நாணுக்
குறை பதி யென்னும் உலகு



---திரு வள்ளுவ மாலை---------



வான்புகழ்வான்புகழ் வள்ளுவனை உலகினுக்கே தந்து பெருமைஉற்றது   தமிழ்நாடு றள் பற்றிய  பிற  இலக்கியவாதிகளின்   கணிப்பு




அணுவைத் துளைத்து  ஏழ் கடல்   புகட்டி 
குறுகத் தறித்த குறள்    ஔவையார்


கடுகைத் துளைத்து  ஏழ்  கடலைப் புகட்டிக்
குறுகத்  தறித்த குறள்



எல்லாப்பொருளும் இதன்பால் உளதென்பால்
இல்லாத எப்பொருளும்  இல்லையால்--ஸொல்லால்
பரந்த பாவால் என்ன பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத்துணை


ஆயிரத்து முன்னூற்று முப்பத்தருண்கு றளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின்போய் ஒருத்தர்
வாய் கேட்க நூல் உளவோ மன்னு தமிழ்ப்புலவராய்
ராய்க்கேட்க வீற் றிருக்கலாம்



திருக்குறள்  வள்ளுவ பெருந்தகையினால்   உலகுக்கு அளிக்கப்பட்ட   புதையல்
பல்வேறு  புலவர்கள்  அறிஞர்கள்  திருக்குறளுக்கு உரை விளக்கம்  எழுதினார்கள்   காலம் கடந்தும் இன்று 21 ஆம் நூற்றாண்டிலும்  அதன் பெருமை பேசப்படுகிறது .பரமேலழகர் பரிப்பெருமாள்  காளிங்கர் மணக்குடவர்   போன்றோர்  உரை எழுதி மக்களிடம்   திருக்குறளினை கொண்டு சேர்த்த பெருமை உடையவர்கள்
திருக்குறள்   1330  குறள்களைக்கொண்டது
அறத்துபால்    பாயிரம் ,   1-௪  அதிகாரம்  எனவும்
                   இல்லறவியல்    5---௨4  அதிகாரமும்
                  துறவறவியல் 25---௩7  அதிகாரமும்
                    ஊழியல்            38      என  ஒரு  அதிகாரமும்     கொண்டது

பொருட்பால்         அரசியல்    39-------௬3   அதிகாரமும்
                    அமைச்சியல்  64--------௭3   அதிகாரமும்
                    அரணியல்   74---------௮1  அதிகாரமும்
                    நட்பியல்   82------௯5    அதிகாரமும்
                    குடியியல்  96-------௰8   அதிகாரமும்
                   கொண்டதாகவுள்ளது
காமத்துப்பால்     
                   களவியல்   109-------- 115  அதிகாரமும்
                  கற்பியல்    116------- 133   அதிகாரமும் கொண்டதாக   
திருக்குறள்  133   அதிகாரமாகவும்    ஒரு அதிகாரம் பத்து குறளாக     133 அதிகாரமும்   1330  குறள் களையும்
கொணடு  கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு மேலாக   மக்களிடையே   வழிகாட்டியாக      மக்கள் சமுதாயத்தை  சமுதாய அமைப்பினையும்    வாழ்வுமுறையையும்   எழுதாத சட்டங்களாக   
மக்கள் சமுதாயம்  பின்பற்றுகின்றது



திருவள்ளுவர்
___________________

தமிழ்மறை எனும்  தமிழனின்   வாழ்வு முறையினை   வழிப்படுத்த    திருக்குறளை தந்த தெய்வப்புலவர்

மைலாப்பூரில் பிறந்து  மதுரை தமிழ் சங்கத்தில்  பங்கு கொண்டு  தமது நூலால்    பலருடைய பாராட்டைப் பெற்றவர்

கடவுள் நம்பிக்கையுடையவர்  என்பதை காட்ட  கடவுள் வாழ்த்தினை பத்து குறளால்  திருக்குறளை   ஆரம்பிக்கிறார்

ஊழ்வினை   பழவினை முன்யென்ம வினை என நம்பிக்கை கொண்டு   ஊழியல் எனும் அதிகாரத்தினையும்   திருக்குறளில் பாடிஉள்ளார்

இல்லறம்  அதன் பின்னர்  துறவறம் எனெ வாழும் முறைகளையும்  திருக்குறளில்  பாடிஉள்ளார்

அறம்  வலியது  அறம்  இல்லாவிடில் அறம் கூற்றுவன் ஆகும் எனும் பொருள்பட   அறத்தினை நன்கு  விளக்கி கூறிஉள்ளார்

அரசன் அமைச்சன் அரசாங்கம்   எப்படி அமைய வேண்டுமென   குடி மக்கள் எப்படி  வாழ்வேண்டுமென   பொருட்பாலில் 
39-௰8  வரை  உள்ள அதிகாரங்களில் நன்கு  காட்டிஉள்ளார்
அவர்க்குரிய அரசியல் பொருளியல் உளவியல் சமூகவியல்  கருத்துக்கள் இன்றும்  பின்பற்றக்கூடியனவாகவும்  உண்மைகளையும் கொண்டுள்ளன

அன்பு என்பது   ஒரு பெரிய   தமிழ் மறை .அந்த தூய அன்பு மட்டும்  மக்களிடையே  தொற்றுக்கிருமி போல் பரவிவிட்டால்   பூவுலமே சொர்க்கம் ஆகிவிம் என்பதுபோல்  அன்புடைமையை விளக்கியுள்ளார்

அன்பு என்பது போல் கற்பும்  மக்களிடையே  உண்மையாய் இருக்கவேண்டும்   கற்பு என்பது ஒழுக்கம் மட்டுமல்ல  சொன்னபடி செய்தல்  விதிக்கப்பட்ட  ஓழுக்கங்களை  பின்பற்றுதல்    என திருவள்ளுவர்   தமது    நூலில் நன்கு 
உறுதிபடக் கூறிஉள்ளார்

ஏழை யின் மீது கொண்ட  இரக்கம்  இரப்பவர் இரத்தல்  என்பது மிக துன்பமானது  என்பதால்  மக்கள் ஏழை மீது  இரக்கங் காட்ட வேண்டு மெனெ தெளிவாய் கூறிஉள்ளார்

மக்கள்  இல்லறம் துறவறம் பின்பு வானுலக வாழ்வுக்கும் பூவுலுகிலேயே   மண்னுலகில் நல்லபடி வாழ்ந்து பின்னர் வின்ணுலகம்  செல்ல கடவுள்   நம்பிக்கை மிக  முக்கியம் என்பதனையும்   மிக நயம் பட திறமையாக திருக்குறளில்   வெளிப்படுத்திய   தீர்க்கதரிசி திருவள்ளுவர்.  இவர் தமிழ்  உலகத்து  தவப்புதல்வர் ஆவார்


**

*எப்பொருள்  யார் யார்  வாய்க் கேட்பினும்  அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு(423  அறிவுடமை )

எப்பொருளை  யார் யாரிடம் கேட்டாலும்   கேட்டவாறு  கொள்ளாமல்  அப்பொருளின்  மெய்ப்பொருள்  காண்பதே  அறிவாகும்

*வருமுன்னர்க் காவாதான்  வாழ்க்கை  எரிமுன்னர்
வைத்தூறுபோல்  கெடும்

குற்றம் நேர்வதற்கு  முன்னமே  வராமல்  காத்துக் கொள்ளாதவனுடைய  வாழ்க்கை   நெருப்பின்  முன் நின்ற  வைக்கோல் போர்  போல் அழிந்துவிடும்  (  435  குற்றம் கடிதல்)


*செய்தக்க  அல்ல  செயக்கெடும்  ,செய்தக்க
  செய்யாமை  யானும்  கெடும்
 
ஒருவன்  செய்யத்  தகாத  செயல்களை  செய்வதனால்  கெடுவான்
  செய்யத்தக்க செயல்களை  செய்யாது  விடுவதனாலும்   கெடுவான்(  466  தெரிந்து செயல் வகை)



செவி கைப்பச் சொற்பொறுக்கும்  பண்புடை வேந்தன்
கவிகைக் கீழ்  தங்கும் உலகு            -------௩89   - -இறை மாட்சி

குறை  கூறுவோரின்  சொற்களை  செவிகைக்கும் நிலையிலும் 
பொறுக்கின்ற பண்பு  உடைய அரசனது  குடை நிழலில்  உலகம்  தங்கும்


கொல்லான்   புலாலை  மறுத்தானை  கைகூப்பி
எல்லா  உயிரும்  தொழும்   -------௨60   புலால் மறுத்தல்

ஓர்  உயிரினையும்   கொல்லாமல்  புலால் உண்ணாமல்   வாழும்  நெறியினை உடையவனை   உலகில் உள்ள    அனைத்து உயிரினங்களும்  கை கூப்பி வணங்கும்



குனம் நாடி  குற்றமும் நாடி  அவற்றுல்
மிகை நாடி  மிக்க கொளல்

ஒருவனுடைய  குணங்களை  ஆராய்ந்து  பின்னர் குற்
றங்களையும் ஆராய்ந்து  ,மிகுதியானவை எவையென  ஆராய்ந்து 
மிகுந்திருப்பது எதுவென  தெளிந்து கொள்ளல் வேண்டும்

கடிந்த  கடிந்து ஓரர்  செய்தாற்கு  அவைதாம் 
முடிந்தாலும்  பிழை தரும்             ---------௬58   ---வினத்தூய்மை

ஆகாதவை  என விலக்கப்பட்ட  செயல்களை   செய்யாது விடாமல்   தொடர்ந்து  செய்து  முடித்தாலும்  அச் செயலால்   துன்பமே விழையும்




செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்          ---------௬37   - -----அமைச்சு

நாம் கற்ற நூலறிவால்  செய்யும்  வகைகளை அறிந்தும்  ,எனினும்  உலக இயல்போடு   சேர்ந்து  அதற்கு பொருந்துமாறு   செயல்களை செய்ய வேண்டும்

எவ்வது உறைவது உலகம்  உலகத்தோடு
அவ்வது உறைவது  அறிவு     -------௪26     ---அறிவுடைமை

உலகம் எப்படி   செயல் படுகிறதோ  அவ்வகையில்  உலகத்தோடு  பொருந்திய வகையில்  செயல் படுவதுதான்    புத்திசாலித்தனமாகும்



மறந்தும் பிறன்கேடு  சூழற்க சூழின்
அறம் சூழும்  சூழ்ந்தவன் கேடு


பிறருக்கு  கேட்டைத் தரும் செயல்களை  மறந்தும் ஒருவன்  செய்யக்கூடாது.   எண்ணவும் கூடாது.  எண்ணினால்   எண்ணியவனுக்கே கேடு விழையும்  (  204  தீவினை  அச்சம்)




உறுப்பு அமைந்து ஊறு  அஞ்சாமை  வெல்படை வேந்தன் 
வெருக்கையுள்   எல்லாம்  தலை  ( 761  படை மாட்சி)



எல்லா வசதி  கட்டமைப்பு  நிறைந்ததாய்  தடைகள்  இடையூறு   எதிர்ப்புகளுக்கு அஞ்சாத   வெற்றி கொடுக்கக்கூடிய  படைகளை கொண்டவனுடைய  அரசனுக்கு  இதனைவிட  வேறு செல்வம்  பெருமையில்லை. ஒரு அரசன் புகழடையக்கூடிய எல்லாச்செல்வங்களிலும்  பெரும் செல்வம்   வெற்றி தரும்   இப்படை ஆகும்